Page 3 of 3
கல்யாணம் எந்தப் பிரச்சினையும் இல்லாம நல்லபடியா நடக்கணும்!னு நீ நெனைச்சா...நீ கல்யாண மண்டபத்துப் பக்கமே வராதே!...தனசேகர் நம்பற மாதிரி வேற ஏதாவதொரு காரணத்தைச் சொல்லிட்டு, அந்த அன்னைக்கு எங்காவது வெளியூரு போயிடு”ன்னு சொல்லுவோம்!...உண்மையிலேயே அவன் நம்ம மகன் மீது அன்புள்ளவனாய் இருந்தால் நாம் சொல்வதைக் கேட்பான்” தன் எண்ணத்தை சுந்தரி சொல்ல,
“நம் பேச்சையும் மீறி அவன் வந்திட்டான்னா?” பொன்னுரங்கம் கவலையோடு கேட்டார்.
“நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க?...நாமே நேர்ல போய் சொன்னா கேட்பான்...அவ்வளவுதான்” என்று சொல்லி அந்த வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் சுந்தரி.
தொடரும்