அந்த முதலிரவு அறைக்குள் அனுப்புவதிலேயே குறியாயிருந்தாள் சுந்தரி.
“இல்லை...நான் அப்பா வந்ததும்...அவர் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...அதைப் பேசிட்டு அப்புறமா போறேன்” என்று சொல்லி விட்டுக் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தான்.
தாயின் பேச்சை சற்றும் மதிக்காமல் தெனாவெட்டாய் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை தனசேகரைப் பார்க்கப் பார்க்க ஆத்திரமாய் வந்தது ராமலிங்க பூபதிக்கு.
ஆனாலும் தன் மகளுக்காக மொத்தக் கோபத்தையும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு தனசேகரிடம் வந்தவர், “மாப்பிள்ளை... “இந்த நாளை விட்டா...இனி அஞ்சு மாசம் கழிச்சுத்தான் சாந்தி முகூர்த்தம் வைக்கணும்!...”னு ஜோசியர் சொல்லியிருக்கார்!...அதனால...என்ன விஷயமா இருந்தாலும் அதைக் காலைல பேசிக்கலாம்...நீங்க இப்ப போங்க...என் பொண்ணு காத்திட்டிருக்கா!...பாவம் சின்னப் பொண்ணு...அழுதிட்டிருக்கா!” என்றார் சற்றுக் கடுமையான குரலில்.
“த பாருங்க மாமா!...அஞ்சு மாசமென்ன?...அஞ்சு வருஷமே சாந்தி முகூர்த்தம் தள்ளிப் போனாலும்...அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை!...இந்தக் கல்யாணத்துல எனக்கொரு பெரிய குறை ஏற்பட்டிடுச்சு....அது என் மனசுல பெரிய காயத்தை உண்டாக்கிடுச்சு!...அதுக்கு யார் காரணம்?...என்ன காரணம்”ன்னு தெரிஞ்சுக்காம நான் விட மாட்டேன்” ஆணித்தரமாய்ப் பேசினான் தனசேகர்.
அவன் அந்த முரளி விஷயத்தைத்தான் சொல்கிறான், என்பதைப் புரிந்து கொண்ட சுந்தரி.
“டேய்..கல்யாணத்துக்கு வந்தவங்கள்ல பாதிப் பேர் இன்னமும் மண்டபத்துலதான் இருக்காங்க!...அவங்க முன்னாடி அசிங்கப்படுத்தாதேடா” என்றாள்.
அப்போது “சர்”ரென்று வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வேக வேகமாய் வந்தார் பொன்னுரங்கம். வரும் போதே,
“டேய்...உன்னை எங்கெல்லாம் தேடுறது?...போடா...போடா.....சீக்கிரம் போடா...அந்தப் பொண்ணு எத்தனை நேரம்தான் உனக்காக...தூங்காம முழிச்சிட்டிருக்கும்?...அதுகிட்டப் போ...மொதல்ல...மத்த விஷயங்களை காலைல பேசிக்கலாம்!” என்றார்.
“அதுக்கு முன்னாடி நீங்க இங்க வந்து உட்காருங்க!...உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்!” என்றான் தனசேகர் ஒரு சேரைக் காட்டி.
“எதுவும் கேட்க வேண்டாம்...நீ மொதல்ல இடத்தைக் காலி பண்ணு” விரட்டினார் பொன்னுரங்கம்.
தலையை இட, வலமாய் ஆட்டிய தனசேகர், “ம்ஹும்...நான் அதைப் பேசாமல்...முதலிரவு