கேட்டிலிருந்த வாட்ச்மேன் அவனை அடையாளம் கண்டு கொண்டு சிரிக்க, “முரளி...வேலையை விட்டு நின்னுட்டானா?” கேட்டான்.
“ம்ஹ்ஹும்...எனக்கு எந்த விவரமும் தெரியலை தம்பி!...ஆனா ஒண்ணு மட்டும் தெரியும்...நாலு நாளைக்கு முன்னாடி உங்க அம்மாவும் அப்பாவும் இங்க வந்திருந்தாங்க!...முரளியைக் கூட்டிட்டுப் போய் சாப்பாட்டு ரூம்ல உட்கார்ந்து ரொம்ப நேரம் பேசிட்டிருந்தாங்க!...அவ்வளவுதான் தெரியும்!” என்றான் அந்த வாட்ச்மேன்.
அதிர்ந்து போனான் தனசேகர். “என்னது?...என்னோட அப்பாவும்...அம்மாவும் இங்க வந்தாங்களா?...எதுக்கு?...எதுக்கு வந்திட்டுப் போனாங்க?” பதட்டமாய்க் கேட்டன்.
“அதெல்லாம் எனக்கு எப்படித் தம்பி தெரியும்?...ஆனா அவங்க வந்திட்டுப் போன நாளிலிருந்துதான் முரளி வேலைக்கு வரலை!”
கையால் சொடுக்குப் போட்ட தனசேகர், “சந்தேகமேயில்லை...இது என்னைப் பெத்தவங்க செஞ்ச வேலைதான்....ஒண்ணு...அவனை மிரட்டி ஊரை விட்டே துரத்தியிருக்கணும்!...இல்லை...கெஞ்சிக் கூத்தாடி அவனைப் போக வெச்சிருக்கணும்!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, நேரே மண்டத்திற்கு விரைந்தான்.
ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவனுடைய பைக் சத்தம் மட்டும் பெரிதாய்க் கேட்க, எங்கோ மறைந்திருந்த நாய்கள் ஒன்று கூடிக் குரைத்தபடியே அவனைத் துரத்தின.
மிக நெருங்கி வந்து காலைக் கடிக்க வந்த ஒரு நாயைக் காலாக் எட்டி உதைக்க, அது “கைங்ங்ங்” என்று கத்தியபடியே ஓடியது.
மண்டபத்து வாசலில் குழப்பமான முகத்துடன் அவனுக்காகக் காத்திருந்த அவன் தாய், நேரே அவனிடம் வந்து, “ஏண்டா முட்டாள்!...உனக்கு மண்டைல மூளை இருக்கா இல்லையா?...இன்னிக்கு உனக்கு முதலிரவு...இன்னிக்குமா ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் வெளிய சுத்திட்டு வரணும்?....போடா...அங்க உனக்காக உன்னோட புதுப் பொண்டாட்டி காத்திருக்கா...சீக்கிரம் போடா” விரட்டினாள்.
ஆனால், அவள் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சென்றமர்ந்தான்.
அவன் பார்வி அங்கிருந்த எல்லோரையுமே முறைத்தது.
“டேய்...நான் என்ன சொல்றேன்?...நீ என்ன செய்யறே?...போடா அங்கே?” கோபமாய்ச் சொன்னாள் சுந்தரி.
“நான் போறது இருக்கட்டும்...அப்பா எங்கே?...அதைச் சொல்லு முதல்ல” என்றான் தனசேகர்.
“அவர் உன்னைத் தேடித்தான் போயிருக்கார்!...இப்ப வந்திடுவார்...நீ போ மொதல்ல” அவனை