ராகவனுக்கு அந்த சூழ்நிலை சற்றும் பிடிக்கவில்லை. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தான்.
பத்மினிக்கு இவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்றிருந்தது. அதனால் தேங்காய் உடைப்பதைப் போல் தன் மனக்கிடக்கை சொல்ல எண்ணினாள்.
விசு நாரதருக்கும் இடையே நல்ல நட்பு உண்டாகிவிட்டது. அவர்கள் பேசி சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தனர். அலமேலுவிற்கும் கோதாவரிக்கும் இந்த இடம் அமைந்து நன்றாக திருமணம் நடக்க வேண்டும் என்னும் ஆசை துளிர்விட்டிருந்தது.
தனி அறைக்கு சென்றதும் ஹாய் ஹலோ என அசடு வழியவில்லை. “எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல” இருவரும் ஒன்றாகக் கூறினார்கள்.
இருவரின் எண்ணங்களும் ஒரே அலைவரிசையில் இருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை.
இதுவே தங்களின் கடைசி சந்திப்பு என நினைத்துக் கொண்டிருந்தனர். காலம் இவர்களுக்காக அழகான கோலத்தை வரைந்திருந்ததை அறியவில்லை பாவம்.
அதில் மணம் வீசும் வண்ண மலர்கள் இருந்தன கூடவே கண்ணுக்கு புலப்படாத முட்களும் இருந்தன.
கண்டுகொண்டேன் . . கண்டுகொண்டேன் . . .