தொடர்கதை - காதல் முகம் கண்டுகொண்டேன் - 03 - சுபஸ்ரீ
ராகவன் அவசரமாய் தன் பைக்பை பார்க் செய்துவிட்டு ஒட்டமும் நடையுமாய் வந்துச் சேர்ந்தான்.
“ஏன் லேட்? எவ்வளவு நேரமா வைட் பண்றது ” என ராகவனிடம் விளையாட்டாய் கோபித்தாள் கயல்.
“ஹலோ!!! . . . ஜெயில்ல இருந்து பெயில் கிடைக்கறதுக் கூட ஈசி . . . ஆனா ஆபிஸ்ல இருந்து சரியா ஏழு மணிக்கு எஸ்கேப் ஆகறது எத்தனை கஷ்டம் தெரியுமா?” என ராகவன் சிறிய சீப்பினால் தலை வாரியபடி பதிலளித்தான்.
இருவரும் பேசியபடி அந்த பெரிய வணிக வளாகத்தின் முகப்பிலிருந்து உள்ளே நடந்தார்கள். அங்கே மால், தேட்டர், மினி பார்ட்டி ஹால் என சகலமும் இருந்தது. இரவு ஒன்பது மணி செயற்கை விளக்குகளின் ஒளி . . . இயற்கை ஒளியை மிஞ்சியது. இது ஒரு தனி உலகம். இங்கே வந்துவிட்டால் வெளியே போக மனமே வராது.
“ஆபீஸ்ல பெர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்க . . . அதுக்கு என்ன பில்டப்” எனக் கேலியாகக் கயல் கேட்க
“அங்க வேலை செஞ்சா தெரியும். சரியா வீட்டுக்கு கிளம்பும்போதுதான் இதை செய் அதை செய்னு கழுத்த அறுப்பான். அதுவும் எங்க ஆபீஸ் இருக்கே கடவுளே” அலுத்துக் கொண்டான்.
“அவனவன் வேல கிடைக்கலனு கஷ்டப்படுறான். நீ தான் கிடைச்ச வேலைய விட துடிக்கிற ராகவ்”
“வரலாறு படிக்கிறவன் ஒரு ரகம் . . . வரலாறு படைக்கிறவன் ஒரு ரகம் . . . நான் ரெண்டாவது ரகம்” என மேலே பேச முயல
“பைத்தியம் முத்தி போச்சு உனக்கு ” என கிண்டல் பார்வை வீசி சிரித்தவளை விளையாட்டாக அடிக்க முயன்று “நீ தான் லூசு”என்றான்.
பேச்சும் சிரிப்புமாய் அந்த பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தனர்.
“என்துக்கு ராகவன் லேட்?” என தெலுங்கும் தமிழும் கலந்து டைரக்டர் ஸ்ரீனிவாச ராவ் உரிமையுடன் கோபித்தார்.
“ஆபீஸ் ஒர்க் அதான்” என பவ்யமாக பதிலளித்தான்.
“மீரு ஏன்தி காரணம் செப்பப் போற” என கயலை கேட்க
“ நர்மதா” என தோளை குலுக்க . . . மூவரும் பொருள்புரிந்து சிரித்தனர்.
“சரி பார்ட்டியை என்ஜாய் பண்ணுங்க” என்றார் ராவ்
“எதுக்கு இந்த சர்ப்ரைஸ் பார்ட்டி?” கயல் ஆவலுடன் விசாரிக்க