கண்ணீர் சிந்தி விட்டார் சிங்கமுத்து.
“அய்யா...அவரை எங்கே பார்த்தாலும் உடனே குடுப்பதற்காக இந்தப் பணத்தை எப்பவும் என் பேக்கிலேயே வைத்திருப்பேன்!...இப்ப அவர் நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டதால்....நீங்க இந்தப் பணத்தைக் கண்டிப்பா வாங்கிக்கணும்!” கெஞ்சினாள்.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி, என்பது போல் இறந்த பிறகும் தன் மகன் தனக்கு அனுப்பிய பணத்தை சந்தோஷமாய் வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டர் சிங்கமுத்து.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண் இஅருவருக்கும் நன்றி சொல்லி விட்டுக் கிளம்பியதும், அப்பணத்தை முரளியிடம் கொடுத்து கேஷ் பாக்ஸில் வைப்பா” என்றார் சிங்கமுத்து.
***
மறுநாள் காலை,
ஆபீஸில் தன் வேலையில் மூழ்கியிருந்த முரளியிடம் வந்த டிரைவர் சோமு, “தம்பி...உன்னை முதலாளி கூப்பிடறார்” என்று சொல்ல, பரபரப்பாய் எழுந்தான் முரளி.
“அட...இருப்பா...ஏன் இப்படி டென்ஷனாகறே?...நான் என்ன?...“முதலமைச்சர் கூப்பிடறார்!”ன்னா சொன்னேன்?...“முதலாளி கூப்பிடறார்!”ன்னுதானே சொன்னேன்?” சிரித்தபடி டிரைவர் சோமு சொல்ல,
“எனக்கு முதலாளியும் அவர்தான்...முதலமைச்சரும் அவர்தான் போதுமா?” சொல்லி வீடு வேக வேகமாய் முதலாளி சிங்கமுத்துவின் அறை நோக்கிச் சென்றான் முரளி.
அறைக்கதவை நாசூக்காய்த் தட்டி விட்டு உள்ளே சென்றவனைப் பார்த்ததும் தன்னையேயறியாமல்,, “வா கோகுல்” என்றார் சிங்கமுத்து.