“ஆமாம்...அதுக்கென்ன இப்போ?” என்றான் பெண்ணைப் பெற்ற முருகன்.
“ஹா...ஹா...ஹா..”வென்று சிரித்த சிங்கமுத்து இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்பி, “இன்ஸ்பெக்டரய்யா...இந்த ஆள் தன் பொண்ணோட காதலை மறைக்கிறார்!...” என்று சொல்ல,
அந்த முருகன், “இல்லை...இல்லை” என்று அவசரமாய் மறுத்தான்.
“இன்ஸ்பெக்டரய்யா...நான் யூகிச்சிட்டேன்!...இவரு பொண்ணு யாரையோ லவ் பண்ணுது!...ஆனா இவர் அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறார்!...அந்தப் பொண்ணு தங்கவேலு கிட்ட சரணடைஞ்சிருக்கு...அதுக்கு உதவறதுக்காக அவரு அந்தப் பொண்ணை எங்கியோ மறைச்சு வெச்சிருக்கார்” என்றார்.
“அதைச் செய்ய அவரு யாருங்க?” முருகன் ஆவேசமானான்.
“இன்ஸ்பெக்டர்...அந்தப் பொண்ணு மேஜர்...அதைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி வைக்க சட்ட்த்திலேயே இடமில்லை”ன்னு அந்த ஆளுக்குப் புரிய வைங்க” என்றார் சிங்கமுத்து.
அந்த முருகன் வாயடைத்துப் போனான்.
தலையை மேலும் கீழும் ஆட்டியபடி யோசித்த இன்ஸ்பெக்டர், தன் பாக்கெட்டிலிருந்த அந்தப் போட்டோவை எடுத்து சிங்கமுத்துவிடம் காட்டி, “இந்தப் பொண்ணை நீங்க பார்த்திருக்கீங்களா?” கேட்டார்.
வாங்கிப் பார்த்த சிங்கமுத்து, “ம்...பார்த்திருக்கேனே?...என் வீட்டுக்கே வந்திருக்கே” என்றார்.
“என்னது?...உங்க வீட்டுக்கு வந்திருக்கா?...எதுக்கு?...எதுக்கு?” வேகமாய்க் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“எங்க ஆபீஸ்ல முரளின்னு ஒரு பையன் வேலை பார்த்தான்!...அவன் அசப்புல செத்துப் போன என் மகன் கோகுல் மாதிரியே இருப்பான்!...அவனை கோகுல்ன்னு நெனச்சு உங்க பொண்ணு