“ஒண்ணும் பிரச்சினையில்லை!...நானும் அம்மாவும் கண்டிப்பா வந்திடறோம்!...ஞாயிற்றுக்கிழமை எத்தனை மணிக்கு முகூர்த்தம்?”
“காலைல...ஏழு மணிக்கு”
“ஓ.கே...அப்புறம் வேறு என்ன விசேஷம்?” சிங்கமுத்து அவன் வாயிலிருந்து வேறு ஏதாவது தகவல் கசியுமா?...என்கிற எண்ணத்தில் கேட்டார்.
“வேற விசேஷம்...?” என்று இழுத்த முரளி, “அதே முகூர்த்தத்துல தங்கச்சிக்கும் கல்யாணம்” என்றான்.
“ஓ...ரெட்டைக் கல்யாணமா?...பேஷ்...பேஷ்” என்றவர் இணைப்பிலிருந்து அவன் வெளியேறியதும். சீரியஸாய் யோசித்தார்.
“அந்த இன்ஸ்பெக்டரும்...அந்தப் பொண்ணோட கோஷ்டியும் நிச்சயம் அந்த முரளியோட ஊருக்குப் போவாங்க!...கல்யாணத்தை தடுக்கப் பார்ப்பாங்க!...அதுக்கு முன்னாடி நாம அங்க போய் கல்யாணத்தை நல்லபடியா முடிக்கணும்!”
தீர்மானத்தோடு எழுந்தார்.
தொடரும்