"ஆனாலும் அத்தை இவ்வளவு கஷ்டமான வேலையை தருவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை லாவ்ஸ்..." என்றாள்.
"என்ன வேலை?" என புரியாமல் கேட்டாள் லாவண்யா.
"உங்களுக்கு துணையா இருக்க சொன்னாங்களே அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பா இருக்க சொல்லி இருக்காங்க!"
"பாதுகாப்பா? ஏன்?"
ப்ரியா பதில் சொல்லும் முன்,
"லாவி..." என்ற அழைப்புடன் கதவு தட்டப் படும் ஓசைக் கேட்டது.
"இதோ... உங்க ஹீரோ கிட்ட இருந்து உங்களை பாதுகாக்குற வேலை தான்! எப்படி நான் இந்த கஷ்டமான வேலையை செய்ய போறேன்! கடவுளே..."
"ப்ரியா! அவர் வேற எதோ சொல்ல வந்து இருப்பார்..."
“க்கும்...!!! இவ்வளவு நேரம் அப்போ பேசாம வேற என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?"
"அது...! வந்து... நீங்க ரொம்ப மோசம் ப்ரியா... அவர் எதுக்கு வந்திருக்கார்னு..."
"நான் பார்க்கிறேன்... நீங்க இங்கேயே இருங்க..."
அறையின் கதவை திறந்த ப்ரியாவை பார்த்த சுபாஷ் ஏமாற்றத்துடன்,
"ப்ரியா, நீ என்ன இங்கே? பாவம் மகேஷ், நீ கிளம்பு..." என்றான்.
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Evergreen cute story, always my all time favorite