மனோஜும் அசோக்கும் கைக் குலுக்கி கொண்டார்கள்...
“நாளைக்கு வரத் தானே மஞ்சு??” என மீண்டும் கேட்டான் அசோக்.
மஞ்சு சந்தேகமாக மனோஜைப் பார்த்தாள்...
“அவரை எதுக்கு பார்க்குற? அவரையும் கூப்பிட்டு வா...
மனோஜ், மஞ்சு எங்கேயும் வரது கிடையாது... நாளைக்கு எங்க மேனஜர் கௌரவ் வீட்டுல ஒரு கெட் டுகெதர் இருக்கு... நீங்க இரண்டுப் பேரும் வாங்க...”
அப்போதைக்கு மனோஜ் அசோக்கிற்கு எதோ சொல்லி சமாளித்தான்...
தொடர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு மஞ்சுவும் மனோஜும் விடைப் பெற்றார்கள்...
அசோக்கை விட்டு தள்ளி வந்ததும்,
“ஏன் மஞ்சு, அப்படி எங்கேயும் போகாம, மிங்கிள் ஆகாம இருக்க??? நாளைக்கு நாம போகலாம்...” என்றான்...
கௌரவ் பற்றிய யோசனை வந்து முகத்தை சுழித்த மஞ்சு... தானாக பக்கத்தில் இருந்த கணவனுடன் ஒட்டிக் கொண்டாள்...!!!
தொடரும்...