தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா – பாகம் 2 - 20 - பிந்து வினோத்
“மஞ்சு, வாட் அ சர்ப்ரைஸ்! முதல் தடவை உன்னை ஆஃபீஸ் என்விரான்மென்ட் விட்டு வெளியே பார்க்கிறேன்.” என்று ‘டிராமாட்டிக்’ ஆக மஞ்சுவை வரவேற்றான் கௌரவ்.
“எப்போவும் வேலை இருக்கும் கௌரவ் வேற எதுவுமில்லை... அண்ட், இவர் என் ஹஸ்பன்ட் மனோஜ்.” என தன்னோடு வந்திருந்த கணவனை கௌரவிற்கு அறிமுகம் செய்தாள் மஞ்சு.
மனோஜும், கௌரவும் கைக் குலுக்கிக் கொண்டார்கள்.
அதற்குள் வேறு சிலர் வரவும், கௌரவ் அவர்களை வரவேற்க சென்றான்.
“PBS, பயங்கரமா வேலை செய்றேன்னு கதை விட்டு வச்சிருக்க போலருக்கு? இதுக்கு முன்னாடி இருந்த ஷசாந்த் இப்படி சொன்னதில்லையே???” என்று மனைவியிடம் ரகசியமாக விசாரித்தான் மனோஜ்.
ஷசாந்த் கௌரவ் போல கேவலமாக நடந்துக் கொண்டது கிடையாதே... என்று மனதில் வந்த எண்ணத்தை சொல்லாமல் சிரித்து மழுப்பினாள் மஞ்சு.
“நீ இப்படி எல்லாம் க்யூட்டா எல்லோர் முன்னாடியும் சிரிச்சா... அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது...” என்றான் மனோஜ் இப்போதும் ரகசியமாக... ஆனால் மனைவியை சீண்டும் குரலில்...
“என்ன செய்வீங்கன்னு உங்களுக்கு வேணா தெரியாது... எனக்கு நல்லா தெரியுமே...” என்று அவனை விட ஒரு படி அதிகமான சீண்டும் குரலில் பதில் சொன்னாள் மஞ்சு...
அவளின் பேச்சில்... இதழில் இருந்த கேலி கலந்த புன்னகையில்... கண்களில் தெரிந்த சவால் விடும் தோரணையில், மனோஜிற்கு உண்மையிலேயே இருக்கும் இடம் மறந்துப் போனது... அவனும் மஞ்சுவும் மட்டுமே அவனின் கவனத்தில் நிறைந்தார்கள்.
“மஞ்சு, நீ மட்டும் ஏன் அங்கே இருக்க, இங்கே வா...” என மஞ்சுவுடன் வேலை செய்யும் கோமதி அழைக்கவும், மஞ்சு வேண்டுமென்றே மனோஜ் பக்கம் மயக்கும் பார்வையையும்