தொடர்கதை - மௌனம் பேசியதே - 08 - சசிரேகா
குன்னூரில் பவித்ராவிற்கு வேலை மாற்றம் தரப்பட்டதால் அங்கு சென்றவள் முதலில் வேலையில் சேர்ந்தாள், சின்ன ஊர்தானே பெரிதாக வேலை பளு இல்லை, அங்கு இருப்பவர்களும் இவளிடம் நல்லவிதமாகவே பேசினார்கள், என்ன அங்கு இருக்கும் ஹாஸ்டல் வசதி அவளுக்குப் பிடிக்கவில்லை, சென்னையில் வாழ்ந்து பழகியவளுக்கு அந்த ஊரில் வாழ சிரமமாக இருந்தது, தனக்கென ஒரு வீடு எடுத்து தங்கினாள், சிறிய வீடுதான் தேவையான அளவு பொருட்களை வாங்கி அவளுக்கு அவளே சமைத்து சாப்பிட்டு வேலைக்குச் சென்று வந்தாள்.
தனி வீடு, வேலையிலும் பளு இல்லை, அக்கம் பக்கம் வீட்டினரும் பவித்ரா வங்கியில் வேலை செய்வதால் அவளுக்கு மதிப்பும் மரியாதையும் தந்தார
...
This story is now available on Chillzee KiMo.
...
து அப்படியிருக்கிறாள் என புரிந்துக் கொண்டனர், அவளும் பெரிதாக யாருக்கும் பிரச்சனையாக இருக்கவில்லை, அவளாலும் யாருக்கும் பிரச்சனை வந்ததில்லை, அதனாலேயே அவளை அனைவருக்கும் பிடித்துவிட்டது.