(Reading time: 10 - 20 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

மஞ்சு...

  

“நல்லா தான் ஐஸ் வைக்குற...” என்று சொல்லிக் கொண்டே நிர்மலா உடன் சென்றாள் பத்மா...

  

அவர்கள் இருவரும் போனதும், பத்மா சொன்னதற்காக உதட்டில் தோன்றி இருந்த புன்னகையுடன், எந்தெந்த தட்டில் என்னென்ன பழங்கள் எடுத்து வைப்பது என்று யோசித்தாள் மஞ்சு...

  

அதற்குள் பெரியவர்கள் போவதற்காக காத்திருந்ததுப் போல மனோஜ் அவளருகே வந்து அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

  

மஞ்சு திகைத்துப் போனாள்!

  

“மனோஜ் என்ன செய்றீங்க? எல்லோரும் பார்க்குறாங்க...”

  

அவளின் குரலில் இருந்த கெஞ்சல் உணர்ந்து இன்னும் அதிகமாக அணைத்துக் கொண்டான் மனோஜ்.

  

“மனோஜ், மானத்தை வாங்காதீங்க...”

  

“உன்னை நான் சரியா பார்த்து இரண்டு வாரம் ஆச்சு... முழுசா பேசி நாலு நாள் ஆச்சு...”

  

“அப்படியா?? அப்போ, நேத்து மொட்டை மாடியில என்னோட கதை பேசினது யாரு??”

  

“அதெல்லாம் கணக்குல வராதது...”

  

மனோஜ் சொன்ன பதில் கேட்டு மஞ்சுவிற்கு சிரிப்பு தான் வந்தது...

  

அவர்கள் நின்றிருந்த இடம் பொருட்கள் இருந்த ஸ்டோர் ரூமின் அருகே இருந்ததால் அதிகமாக யாருமில்லை... திருமண மண்டபத்தில் கூட்டம் வர தொடங்கி இருந்தாலும், இந்த பக்கம் ஒருவரும் இல்லை...

14 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.