(Reading time: 5 - 9 minutes)
Inspector Then
Inspector Then

"முதல்ல அந்த பையை கொடுங்க..."

  

தென்றல்வாணனின் கையில் இருந்த பையை (கிட்டத்தட்ட) பிடுங்கி திறந்துப் பார்த்தவள், நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

  

"வெண்டைக்காய் காலி ஆகிடுச்சு சத்யா, ஆனால் நேத்து மாதிரி எதுவும் வாங்காம வரலை கத்தரிக்காய் வாங்கி இருக்கேன்!"

  

"இதுக்கு பேர் கத்தரிக்காயா? காஞ்சு போன கருவாடு மாதிரி இருக்கு!"

  

"நாளையிலேருந்து நான் கடைக்கு போறேன்ம்மா. அப்பாவை அனுப்பினால் தினம் தினம் நாம தயிர் சாதம் சாப்பிட வேண்டியது தான்!" என்று மீண்டும் சத்யாவிற்கு “கீ” கொடுத்தாள் ஷாலினி.

  

ஷாலினியை பார்த்து,

  

"உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்!" என முனுமுனுத்த தேன், மனைவியிடம்,

  

"சாரி சத்யா. நாளைக்கு கரெக்ட்டா செய்றேன்." என்றான் அமைதியாக.

  

"இதே வசனத்தையே அலுக்காம பத்து வருஷமா சொல்றீங்க. ஆனால கரக்ட்டா நடக்குற வழியைக் காணும்"

  

"புது ஊராச்சே அதனால் கொஞ்சம் டைம் கொடு!"

  

"கொடுத்திட்டாலும்!"

  

"வேற என்னம்மா? நீங்க கொடுக்குற டைம் முடியுறதுக்குள்ளே அப்பாவை வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் செஞ்சிடுவாங்க, திரும்ப இதையே ரீப்பீட்ல போட்ட பாட்டு மாதிரி பாடிட்டே இருப்பார்!" என்றாள் ஷாலினி சிரிப்பை அடக்கிக் கொண்டே!

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.