"அப்போ அந்த திருடங்களை எப்படி தேடுறது சார்? யாருமே எதுவும் பார்க்கலை. டிஸ்க்ரிப்ஷன் கூட இல்லை," என்றான் அபினவ் அலுப்புடன்.
தென்றல்வாணன் அந்த அளவிற்கு டென்ஷன் ஆகவில்லை.
"டேக் இட் ஈஸி அபினவ்!” என சப் இன்ஸ்பெக்டரை தேற்றியவன்,
“நான் சொல்றதை செய்ங்க! உங்க கிட்ட ஜமால், முத்து, இந்திரா மூணு பேருடைய மொபைலும் இருக்கு. இன்னைக்கு காலையில அந்த மொபைல்ஸ்க்கு வந்த கால்ஸ் எல்லாத்தையும் ட்ராக் செய்ங்க. அந்த டீட்டேயிலும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்த உடனே நாம திரும்ப டிஸ்கஸ் செய்யலாம்." என்றான் கூலாக!
"சார்!!!! யாரு மேல சார் நீங்க சந்தேகப் படுறீங்க??"
"சொல்றேன், நீங்க நான் கேட்ட டீடெயில்ஸ் வந்த உடனே சொல்லுங்க, நாம சந்தேக லிஸ்ட் பத்தி பேசலாம். மீன்வைல், முத்துக்குமாரோட தொழில் சம்மந்தப்பட்ட எதிரிகள் யாருன்னு கேட்டு விசாரியுங்க.”
“நான் கேட்ட வரைக்கும் சுபேஷ்ன்னு ஒருத்தரை தான் எல்லோருமே சொல்றாங்க, சார். அவர் அன்-எத்திக்கலா பிஸ்னஸ் செய்றவர்ன்னு கேள்வி. அவருக்கும் முத்துக்குமாருக்கு தொழில் முறை போட்டி இருந்ததாகவும் சொல்றாங்க.”
“அபினவ், உடனே இந்த சுபேஷை கான்டாக்ட் செய்து பேசுங்க. அவர் கிட்ட இருந்து புது தகவல் கலக்ட் செய்ய முடியுதான்னு பாருங்க.”
“ஓகே சார்!”
“நான் முத்துக்குமாரோட வீட்டுல வேலை செய்ற லேடியை வரச் சொல்லி இருந்தேனே, வந்துட்டாங்களா?"