(Reading time: 6 - 11 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

போல இருக்கும். அக்கா ஸ்கூலுக்கு போயிருப்பா.”

  

“அக்கான்னு சொல்ற, இன்னுமா ஸ்கூல் படிக்குறாங்க?

  

“என் அக்கா டீச்சரா இருக்கா, அக்ஷரா! வாட்ஸ்அப்ல தான் அவளோட பேச முடியும். என் கிட்ட இப்போ டேட்டா இல்லையே. இங்கே இருக்க வைபை கனக்ஷன் பாஸ்வோர்ட் என்னன்னு தெரியலையே.”

  

“என் போன்ல பேசு. இந்தா.”

  

அக்ஷரா தன் லேட்டஸ்ட் ஆப்பிள் போனை அன்லாக் செய்து அவனிடம் கொடுத்தாள்.

  

“தேங்க் யூ அக்ஷரா!”

  

ஆதித்யா வெகு கவனத்துடன் அந்த போனை பயன்படுத்தினான். அது எவ்வளவு விலை உயர்ந்தது எனபது அவனுக்கு தெரியும்.

  

வாட்ஸ்அப்பில் சான்வி நம்பரை விடியோ கால் டையல் செய்தான்.

  

“ஆதி என்னடா இந்த நேரத்துல கூப்பிடுற? ஸ்கூல்ல இருக்கேன். இது என்ன நம்பர்?

  

சான்வி கேள்விகளாக அடுக்கவும், ஆதித்யா பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த அக்ஷரா சான்வியை பார்க்கும் ஆர்வக் கோளாறில் அவனோட ஒட்டிக் கொண்டு பக்கத்தில் வந்து நின்றாள்.

  

சான்வியின் ஸ்க்ரீனில் இப்போது அக்ஷராவும் தெரிந்தாள்.

  

ஆதித்யாவை உரசிக் கொண்டு நிற்கும் பெண் யாரென்று சான்விக்கு புரியவில்லை.

  

“யாரு ஆதி இவங்க? நீ எங்கே இருக்க?

  

சான்வியின் கேள்வியில் சந்தேகம் இருந்தது.

   

   

தொடரும்...

Go to Sirikkum Rangoli story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.