(Reading time: 6 - 11 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

“இதுக்கு நீங்க என்ன செய்ய முடியும்? நீங்க உண்மையை சொல்லி இருக்கலாமே?

  

“சொன்னேன், எனக்கும் காலேஜ் ராபர்ட்டை செலக்ட் செய்யாததுக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு விளக்கமா சொன்னேன். அவங்களும் நம்பினாங்கன்ன்னு நினைச்சேன். இங்கே முதல் நாள் ட்ரெடிஷனலா வரனும். அதும் அவங்கவங்க சொந்த கல்ச்சர் பின்பற்றி இருக்கனும்னு மேகனா சொன்னா. அதை நம்பி நானும் சாரீ கட்டிட்டு வந்தேன். இப்போ அவங்க எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குறாங்க. அவங்க என்னை நம்பலைன்னு புரியுது.”

  

“விடுங்க எல்லோருக்கும் நம்மளை புரியாது.”

  

“எனக்கு அது தான் புரியலை, ஆதித்யா. எங்கப்பா பணக்காரரா இருந்தா எனக்கு எதிலேயுமே உண்மையான ஆர்வம் வரக் கூடாதா? நான் என்ன செய்தாலும் எங்கப்பா பணம் வழியா நான் செய்றேன்னு நினைக்குறாங்க, குத்திக் காட்டுறாங்க. எனக்கு அறிவே இல்லைன்னு அவங்களா முடிவு செய்துடுறாங்க.”

  

“உங்க பிரச்சனைக்கு அப்படியே ஆப்போசிட் என்னுடையது. எனக்கு எவ்வளவோ செய்யனும்னு ஆசை இருக்கு. ஆனால் கையில பணம் இல்லை. ஹெல்ப் செய்றேன்னு சொன்ன ஒரு நண்பனும் முதுகுல குத்திட்டான். என் அக்காவுடைய உதவியால தான் இங்கே வந்திருக்கேன். எவ்வளவு தடவை அவளை தொந்தரவு செய்றதுன்னு கஷ்டமா இருக்கு. இது தான் என்னுடைய கனவுகளுக்கு எனக்கு இருக்கும் ஒரே கடைசி வழி!”

  

“சாரி ஆதித்யா. நீ ரொம்ப பாவம்.”

  

“பரிதாபப் படாதீங்க அக்ஷரா. எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்குன்னு உங்களுக்கு புரியுறதுக்காக சொன்னேன், அவ்வளவு தான்.”

  

“இங்கே அப்போ தனியா இருக்கீயா? உனக்கு டீம் இல்லையா? நாம டீமா சேர்ந்துக்கலாமா?

  

அக்ஷராவிடம் அதிகபடியான் ஆவல் தெரிந்தது. எனினும் ஏற்றுக் கொள்ள ஆதித்யாவிற்கு மனம் இல்லை.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.