மனைவியை கேட்டுப் பாருங்க."
"ம்ம்ம். கொஞ்சம் முன் ஒரு போன் வந்ததே, அது என்னோட கான்ஸ்டபில் கிட்ட இருந்து வந்த போன். உங்க மனைவி கிட்ட இன்னைக்கு காலையிலே எப்போ தூங்கி எழுந்தாங்கன்னு கேட்க சொல்லி இருந்தேன். ஏழு மணிக்கு மேல தான் எழுந்தாங்களாம்! கொலை நடந்தது காலையில் ஆறில் இருந்து ஏழுக்குள்ள. முத்துக்குமார் வீட்டில இருந்து உங்க வீட்டுக்கு நடந்துப் போக அஞ்சு நிமிஷம் கூட ஆகாது. நீங்க கூலா நடந்து போயிருந்தா கூட டைமுக்கு வீட்டுக்கு போயிருந்திருக்கலாம்."
"இன்ஸ்பெக்டர், என்னோட அப்பா அப்படி எல்லாம் செய்ய மாட்டார்... இந்திரா எனக்கு போன செய்தான்னு சொன்னேனே! அப்பா வந்திருந்தா எனக்கு ஏன் போன் செய்து கேட்க போறா?" என்று நடுவில் பேசினான் முத்துக்குமார்.
"உங்களோட அவங்க போன் பேசி முடிச்ச பிறகு இவர் வந்திருக்கலாம்..."
"நோ நோ இன்ஸ்பெக்டர். வேற யாரோ செய்த கொலை இது... அப்பா இப்படி கொடூரமா எதையும் செய்ய வாய்ப்பே இல்லை! அதுக்கு அப்புறம் பொறுமையா பீரோ, லாக்கர் உடைச்சு திறக்கிறது எல்லாம், நோ வே! நீங்க தப்பா பார்க்குறீங்க..."
"அப்படியா நினைக்குறீங்க? உங்க அப்பா வீட்டில் போய் தேட, சர்ச் வாரன்ட் ரெடியாகிட்டு இருக்கு. வீட்டில போய் தேடினால் விஷயம் தெரிஞ்சுடும்."
ரமணி சோர்வுடன் நாற்காலியில் தோய்ந்து அமர்ந்தார்.
முத்துக்குமார் அதிர்ச்சியுடன் அவரை பார்த்துக் கொண்டு நின்றான்!
“ஸாரி, மிஸ்டர் முத்துக்குமார். உங்க நிலைமை எனக்குப் புரியுது! உங்க மனைவியை சொந்த அப்பாவே கொலை செய்தாருன்னு..." என பேசிக் கொண்டிருந்த தேனின் பேச்சின் நடுவில் குறுக்கிட்டான் முத்துக்குமார்.
"நோ நோ நோ இன்ஸ்பெக்டர்... அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை... எதோ எதோ