அவனையே ஒரு சில வினாடிகள் பார்த்த தேன், ஒரு பெருமூச்சுடன் அபினவை பார்த்து கைது செய்யுமாறு சைகை செய்தான்.
இந்திராவின் உயிரற்ற உடலை பார்த்த வினாடி முதல் அழுது புலம்பி கொண்டிருந்த முத்துக்குமார் திடீரென்று அவனே குற்றத்தை ஒப்புக் கொள்ளவும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர அபினவிற்கு சில வினாடிகள் பிடித்தது. அவன் முத்துக்குமாரை குற்றவாளியாக நினைத்தே பார்த்திருக்கவில்லை!
தேனின் கட்டளை கருத்தில் பதிந்ததும், முத்துக்குமாரை கைது செய்தான்.
இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன் மீது அபினவிற்கு இருந்த மரியாதை பல மடங்கு அதிகமாகி இருந்தது.
எந்த டென்ஷனும் இல்லாமல் எத்தனை இலகுவாக குற்றவாளியை கண்டுப்பிடித்து விட்டார்! முத்துக்குமாரே அவனின் தண்டனையை ஒத்துக் கொள்ள தான் கேமரா மற்றும் மொபைல் பற்றி பொய் சொல்லி இருக்கிறார்!!!
போலீஸ்க்கு தேவையான பல புது பாடங்களை தெரிந்துக் கொண்ட மகிழ்ச்சி அபினவிற்கு ஏற்பட்டது!
****************
"அப்போ கேஸ் முடிஞ்சிடுச்சு?" என்றுக் கேட்ட சத்யாவின் குரலில் சந்தேகம் இருந்தது.
சத்யாவிற்கு க்ரைம் செய்திகளில் எப்போதுமே ஆர்வம் உண்டு என்பது தென்றல்வாணனிற்கு தெரியும். அதனால் தன் கேஸ் பற்றிய மேலோட்டமான தகவல்களை அவளிடம் பகிர்ந்துக் கொள்வது அவனின் வாடிக்கை. அப்படி தான் இந்திரா கொலை குற்றவாளி பற்றியும் அவளிடம் சொல்லி இருந்தான்.
"ம்ம்ம்ம்... முத்துக்குமாரே கொலை செய்தேன்னு ஒதுக்கிட்டு வாக்குமூலமும்