Page 8 of 8
பக்கத்தில் பார்த்தான். சத்யா கட்டிலில் சாய்ந்து அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.
"சத்யா, உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கவா?"
சத்யா கணவனை புரிந்துக் கொண்ட பார்வை பார்த்தாள்.
"வாங்க..." என்றாள்.
"தேங்க்ஸ்" என்றபடி அவள் மடியில் படுத்துக் கொண்ட தேன் போலீஸ் என்ற தோரணை எல்லாம் காணாமல் போய், அவள் கண்ணிற்கு சிறு குழந்தையாக தெரிந்தான்.
அவள் மென்மையாக அவனின் முடியை வருடி விட, அப்படியே தூங்கிப் போனான் தென்றல்வாணன்!
கேஸ் ஃபைல் # 01 நிறைவுப்பெற்றது!
தொடரும்...