“சாப்பிடுறீங்களா? எல்லாம் ரெடியா இருக்கு!” என்றாள் மஞ்சு.
“இல்லை! நீ சாப்பிடு. எனக்குப் பசிக்கலை!” என்றான் மனோஜ்.
சாப்பிடாமல் இருந்தால் பிரச்சனைகள் சரியாகி விடுமா, என்று கேட்க நினைத்து உதட்டை அசைத்த மஞ்சு, அதை சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள்!
அதை கேட்பதால் எதுவும் நடந்து விடப் போவதில்லை என்பது அவளுக்குத் தெரியும்!
ஆனால் மனோஜை அப்படியே விட்டு விடவும் அவளுக்கு மனம் வரவில்லை! அவனை எதாவது சொல்லி சமாதானம் செய்ய நினைத்தாள்!
அமுதா உறுதி செய்தப் பிறகு அவள் சொன்ன வேலை பற்றி மனோஜிடம் சொல்ல நினைத்திருந்தாள்... ஆனால் இப்போது மனதை மாற்றிக் கொண்டு,
“மனோஜ், அமுதா கிட்டப் பேசினேன்...” என்று ஆரம்பித்தாள்.
மனோஜ் ‘எதற்கு இதை என்னிடம் சொல்கிறாய்?’ என்பதுப் போல அவளைப் பார்த்தான்.
அதைப் பற்றி எதுவும் சொல்லாது,
“அவங்க கம்பெனியை எக்ஸ்டன்ட் செய்றாங்களாம்...” என்றாள்.
மனோஜ் இப்போதும் புரியாமலே நின்றான்!
“புதுசா நிறைய பேர் வேலைக்கு எடுக்குறாங்களாம்...”
“ஒ...” என்றான் மனோஜ் புரிந்துக் கொண்டதன் அறிகுறியாக! கூடவே,