(Reading time: 6 - 12 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

எங்கே செல்கிறான் என்று அவனும் சொல்லவில்லை, கேட்க வேண்டும் என்று அவளுக்கும் தோன்றவில்லை!

  

அவன் யாரையும் ஹர்ட் செய்ததில்லையாமே???!!!

  

இப்போதெல்லாம் அவன் நடந்துக் கொண்டிருப்பதை வேறு எப்படி சொல்வது???

  

மஞ்சுவிற்கு கோபமும் வந்தது, கண்களும் கலங்கியது!

  

இந்த மண்ணாங்கட்டி கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று யார் அழுதது???

  

திருமணம் என்ற ஒன்றை கண்டுப்பிடித்தது யாராக இருந்தாலும் அவர்கள் மட்டும் மஞ்சுவின் கண் முன்னே வந்தால், அவ்வளவு தான்!!!

  

காமிக்ஸ் கதைகளில், ஆண்களே இல்லாமல் பெண்கள் மட்டும் இருப்பதாக சொல்லப்படும் அமேசான் போல ஒரு இடம் உண்மையில் இருந்தால் மஞ்சு அங்கே போய் விடுவாள்!!

  

தாறுமாறாக மனதில் அவளுக்கு எண்ணங்கள் ஓடியது!!

  

ஆனால் மனோஜின் வார்த்தைகளும், அவனின் செய்கையும் மஞ்சுவின் மனதில் ஆழ்ந்த காயத்தை ரணத்தை ஏற்படுத்தி இருந்தது!

  

கணவனுக்கு மனைவி உதவ நினைத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது??? அவன் அவளை ராணி போல பார்த்துக் கொள்வதாக சொன்னால் அவள் சந்தோஷப் பட வேண்டுமாம்! ஆனால், அதே அவள் அவனுக்காக ஒன்று செய்தால் அது அவனுக்கு ‘ப்ரெஸ்டீஜ் இஷ்யூ’ ஆக மாறி விடுமாம்!

  

இதை என்ன என்று சொல்வது! ‘ஸ்டீரியோடைப்’ என்று தான் சொல்ல வேண்டும்!!!!

  

அவளையும் மீறி கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள்! ஆனால் நிற்காத

4 comments

  • Manoj is making mistake after mistake. huh! What else can Manju do? She is trying to be helpful and understanding but he is making her life harder.
  • very interesting chapter bindu. pavam manju. ava purinju nadakurathu manoj ku ethuku puriyalai. manju sandai potu iruntha avanukku evalavu prb vanthirukum.
  • pavam manju :sad: <br />entha manoja enthan seirathu kovam vantha onnu theriyathu :yes: :angry: <br />amutha manju friendship enna akumo so sad
  • Pengal udhava ninaithalum purinthu kollavillaiye adhuvum manaivi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.