மஞ்சு உதடுகளை கடித்துக் கொண்டு யோசித்தாள். அமுதா இந்த கேள்வியை கேட்பாள் என்பது அவளுக்கு முன்பே தெரியும்! உண்மையை சொல்ல ஒரு வினாடி கூட தேவைப்படாது!
ஆனால், மனோஜ் ரெகமென்டேஷன் வழியாக கிடைத்த வேலையில் சேர மாட்டேன் என்று பந்தா செய்கிறான் என்று சொல்ல மஞ்சுவிற்கு மனம் வரவில்லை.
மனோஜ் மீது அவளுக்கும் கோபம் இருந்தது, வருத்தமும் இருந்தது... ஆனாலும் நெருங்கிய தோழியிடம் கூட அவனை விட்டுக் கொடுக்க அவள் தயாராக இல்லை!!! அதனால்,
“நானே தான் யோசிச்சேன், அம்மு... மனோஜ்க்கு உன் கம்பெனில வேலை செய்றது எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன்... அவருக்கு நல்லாவே இருக்காதுன்னு தோணுது... அதான் வேண்டாம் அம்மு...” என்று பழியை தன் மீதே போட்டுக் கொண்டாள்!!!
“மஞ்சு!!! விளையாடுறீயா???” என்றப்ப போது அமுதாவின் பேச்சில் உஷ்ணம் பல மடங்கு ஏறி இருந்தது.
“சாரி அம்மு!”
“நிறுத்து! நீ சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக போயிட்டு இருந்த ரெக்ரூட்மென்ட் ப்ராசஸ் மொத்தத்தையும் நிறுத்த சொன்னேன். சரா மனோஜை பார்த்ததோ பேசினதோ கிடையாது. உனக்காக அவர் கிட்டேயும் பேசி வேலையை மனோஜ்க்கு கொடுக்க சம்மதம் வாங்கினேன். இப்போ ஈஸியா என் கம்பெனில வேலை செய்றது சரியா இருக்காதுன்னு சொல்ற??? மனோஜ் சராவோட தான் வேலை செய்வார்... எனக்கு கீழ ஒன்னும் வேலை செய்ய மாட்டார்... நீ எப்போ மஞ்சு இப்படி எல்லாம் யோசிக்க தொடங்கின??? நான் உன்னைப் பத்தி அபப்டி எல்லாம் யோசிப்பேனா??? மனோஜ் என் டீம்ல இருந்தா உனக்கு கௌரவ குறைச்சல் ஆயிடுமா??? எப்படி மஞ்சு இப்படி எல்லாம் யோசிக்குற???”
அமுதா தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்ல, மஞ்சு உதடுகளை கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.