மஞ்சுவின் மனதில் அவனின் நடவடிக்கைகள் முள்ளாக குத்தியது.
மஞ்சு அமுதாவிடம் அவளுக்காக என்று உதவி ஒன்றுக் கேட்டதே கிடையாது. அப்படி பட்டவள், மனோஜிற்காக இறங்கி உதவி கேட்டு பெற்றால் அவனுக்கு அதில் கஷ்டமாகி விட்டதாம்!
இப்போது மட்டும் அல்லாமல், இந்த வேலை கச்சா முச்சா ஆரம்பித்த நாள் முதலே இப்படி தானே நடக்கிறது?
எப்படி யோசித்துப் பார்த்தாலும் மஞ்சுவால் மனோஜின் செயல்களை சரி என்று நியாயப் படுத்த முடியவில்லை!
அவனிற்கு கோபம் என்றால், அவளுக்கும் கோபம் தான்!
அவனின் கோபம் தீரும் போது அவனாக வந்து பேசட்டும் என்ற முடிவிற்கு வந்து தன் வேலையை பார்க்க தொடங்கினாள்!
நாட்கள் யாருக்காகவும் காத்துக் கொண்டிருக்காமல் வேகமாக சென்றுக் கொண்டே இருந்தது!!!
மனோஜ் மஞ்சுவிடம் நேரடியாக பேசி இரண்டு வாரங்கள் மேலே ஆகி இருந்தது... அதற்கு முன்பும் கூட அவர்கள் நடுவே பிரச்சனை இருக்க தான் செய்தது. ஆனால் அப்போதெல்லாம் மனோஜ் அவ்வப்போது திடீரென்று ஒன்றிரண்டு வாக்கியங்கள் பேசுவான்... அவள் தான் அமைதியாக இருப்பாள்...
இப்போது இருவருமே பேசிக் கொள்ளவில்லை!
அது மட்டுமல்லாமல் அமுதாவும் மஞ்சுவுடன் பேசுவதை மொத்தமாக நிறுத்தி இருந்தாள்!
முதல் சில தடவைகள் அமுதா அவளின் அழைப்பை ஏற்காது இருந்தப்போது மஞ்சு பெரிதாக