நினைக்கவில்லை!
ஆனால் இப்போது, நூறு, ஆயிரம் முறை அவள் அழைத்தப் பிறகும் அமுதா அவளிடம் பேசவே இல்லை.
மஞ்சு மெசேஜ் அனுப்பினாள், ஈமெயில் அனுப்பினாள், மெசெஞ்சரிலும் தகவல் அனுப்பினாள். எதற்குமே அமுதா பக்கம் இருந்து தகவல் இல்லை!
அமுதாவின் இந்த புறக்கணிப்பு மஞ்சுவை பெரிதும் பாதித்தது!
மஞ்சு எப்போதுமே தேவை இல்லாது யார் வம்பிற்கும் செயல்பவள் அல்ல! மற்றவர்கள் அவளிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டால் கூட, சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு கொடுத்து ‘இப்படி இருக்கலாம்’, ‘அப்படி இருக்கலாம்’ என்று யோசித்து அமைதியாக இருப்பவள்!
இதனால் தான் திருமணத்திற்கு பிறகும் கூட அவளால் அனைவருடனும் எந்த பெரிய சலசலப்பும் இல்லாது ஒத்துப் போக முடிந்தது!
அமுதாவும் மஞ்சுவும் பல வருட தோழிகள்! அவர்கள் நடுவே சண்டை, பேசாமல் இருப்பது எமனது எல்லாம் வந்ததே கிடையாது!
அதனால் தான் அன்று அமுதா கோபத்துடன் அழைப்பை துண்டித்தப் போது கூட மஞ்சு பெரிதாக கவலைப் படவில்லை. தோழியை சமாதானப் படுத்தி விடலாம் என்று நம்பி இருந்தாள்.
அமுதா இந்த அளவிற்கு கோபத்தை காட்டியது மஞ்சுவை வருத்தம் அடைய செய்தது!!!
சரவணனிடம் பேசலாமா என்று யோசித்தாள்... அவளுக்கு தயக்கமாக இருந்தது...
அமுதாவாவது அவளுக்கு நெருங்கிய தோழி, மனோஜிற்கு வேலை வேண்டாம் என்பதை பற்றி தயங்கி தயங்கியாவது பேச முடியும்... சரவணனிடம் அவள் எப்படி விளக்கம் கொடுக்க