(Reading time: 5 - 10 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

மெசேஜை படித்து விட்டதன் அறிகுறியாக அவை ப்ளூவாக நிறமும் மாறின!

  

அடுத்த வினாடியே, விவேக் எதிர்பார்த்ததுப் போல Who’s this? என்ற பதில் சான்வியிடம் இருந்து வந்தது.

  

“ஐயையோ அம்மா, உங்க டிபில நான் இருக்கவே அந்த பொண்ணு பயந்துட்டா போல இருக்கு. யாருடா நீ ன்னு கேட்குறா!” என்று மிகைப் படுத்தி ஹரிணியிடம் சொன்னான்.

  

“அவ அப்படி எல்லாம் கேட்குற பொண்ணா தெரியலையே?”

  

“என் போட்டோ பார்த்து பயந்துப் போயிருப்பான்னு நினைக்குறேன்!”

  

“உன்னைப் பார்த்து மயங்கி வேணா போகலாம். பயப்படமாட்டா. நீ போனை கொடு. நான் அவக் கிட்ட சொல்றேன்.”

  

“அதை விட கூப்பிட்டு பேசிடுங்கம்மா. ஈஸியா வேலை முடியும்!”

  

“அதுவும் சரி,” என சொன்ன ஹரிணி, சான்வியின் எண்ணை அழைத்தாள். அழைப்பு ஏற்க பட்டதும், “சான்வி, நான் தான் அக்ஷராவோட பெரியம்மா! என் மகன் படத்தை ப்ரோபைல வைக்கவே வேற யாரோன்னு நினைச்சுட்டீயா??” என பேச்சை தொடங்கினாள்.

  

மறுமுனையில் சான்வி,

  

“உங்க நம்பர் சேவ் செய்திருந்தேன் ஆன்ட்டி. இருந்தாலும் படம் மாறி இருக்கவே கன்ப்யூஸ் ஆகிட்டேன். சாரி,” என்றது விவேக்கிற்கும் கேட்டது!

  

“கேட்டு தெரிஞ்சுக்குறதுல தப்பு கிடையாது ம்மா. இப்படி தான் இருக்கனும்!!!” என ஹரிணி தொடர்ந்துப் பேசவும், விவேக் சைகையால் அவளுக்கு டாடா காண்பித்து அங்கிருந்து கிளம்பினான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.