கேள்விகள் கேட்க முடியும்.”
“அதும் சரி தான். இவங்க கிட்ட பேசி முடிக்குறதுக்குள்ளே அபினவ் கிருஷ்ணன் டீடெயில்ஸ் எடுத்து கொடுத்திடுவான். இந்த வேலையை முடிச்சுட்டு, அவரை பார்க்க போகலாம்.”
“குட் ப்ளான் தேன். வா இப்போ ராஜசுலோச்சனா பேமிலி கிட்ட பேசலாம்!”
இருவரும் முன்பு வந்த அதே ஹால் பகுதிக்கு வந்தார்கள்.
“நல்லா வயிறார சாப்பிட்டீங்களா? சீக்கிரமே வந்திருக்கீங்க??” ராஜசுலோச்சனாவின் கனிவான குரல் கேட்டது.
“யெஸ் மேம்! நல்லா சாப்பிட்டோம், ரொம்ப தேங்க்ஸ். இப்போ உங்க கூட பேசலாமா?”
விநோதனின் கேள்விக்கு ராஜசுலோச்சனா பதிலா ளிக்கும் முன்பே “எத்தனை தடவை தான் பேசுவீங்க? எரிச்சலா வருது! அந்த கமிஷனர் என்ன தான் நினைச்சுட்டு இருக்கார்ன்னு புரியலை!” என ஒரு ஆண் குரல் ஒலித்தது.
எரிச்சலுடன் ஒலித்த குரலுக்கு சொந்தக்காரனை நோட்டம் விட்டான் தேன். இதே குரல் தான் அவர்கள் வீட்டுக்குள் வந்த போதும் அவர்களின் காதில் விழுந்தது!
குரலுக்கு சொந்தக்கார இளைஞன், ஆறடி உயரத்தில் இருந்தான். அவனுக்கு அருகே அழகு பதுமையாக ஒரு பெண் இருந்தாள். ராஜசுலோச்சனா இளமையில் அப்படி தான் இருந்திருப்பாள் என்று நினைக்கும் அளவிற்கு ஆச்சு அசல் ராஜசுலோச்சனா போலவே இருந்தாள்.
தென்றல்வாணன் அவர்களை நோட்டம் விடும் போது, “திலீப், எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?” என்று ஆறடி இளைஞனை அடக்கினாள் அந்த பெண்.
பிறகு இவர்கள் பக்கம் பார்த்து, “ஹலோ இன்ஸ்பெக்டர், நான் தான் அமிர்தா. உங்களுக்கு என்ன தெரியனுமோ அதை தாராளமா கேளுங்க!” என்றாள்.