“ஒ, ஓகே!” என்ற தேனும், வினோதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
********************
உணவு அறையில் இருந்து வெளியே வந்ததும் தென்றல்வாணன் வினோதனுக்கு கண்ணாலேயே சமிஞை செய்து விட்டு, தன்னுடைய கைப் பேசியில் நம்பரை டையல் செய்துப் பேசினான்.
“அபினவ், எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். இந்த ரோகினி கேஸ்ல முன்னாடி இன்வால்வ் ஆகி இருந்த சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் இப்போ எந்த ஸ்டேஷன்ல இருக்காருன்னு இன்ஃபர்மேஷன் வேணும். ஐ நீட் இட் க்விக்!”
“ஓகே சார். உடனே கேட்டு சொல்றேன்!” என்றான் அபினவ்.
“குட். இன்ஃபோ கிடைச்ச உடனேஏ எனக்கு கால் செய்ங்க.”
“ஓகே சார்.”
“தாங்க்ஸ் அபினவ்.”
"சார், எம்.எல்.ஏ..."
"அவர் கிட்ட இந்த கேஸ் முடிஞ்ச உடனே பேசுறேன்னு சொல்லு..."
போனை பாக்கெட்டினுள் வைத்த தேன், “வினோதன், கிருஷ்ணன் கிட்ட பேசினாலே நமக்கு தேவைப் படும் பெரும்பாலான விஷயங்கள் தெரிஞ்சிரும்னு தோணுது, வாட் டூ யூ தின்க்?” என்று ரகசியமாக வினவினான்.
“அவர் கிட்ட பேசுறதும் ஹெல்ப் ஆக இருக்கும் தேன். பட், இங்கே ராஜசுலோச்சனா, அமிர்தா, திலிப் அண்ட் அந்த ரோசி கிட்ட நேரா பேசுறதும் இம்பார்டன்ட். அப்போ தான் நமக்கு நேரடியா