கட்டிப் போட ஒத்துக்கிட்டீங்க?”
“ஆன்ட்டி, நீங்க அமைதியா இருங்க.” என கட்டளை இடுவதுப் போல ராஜசுலோச்சனா பேசாமல் தடுத்த திலீப், தென்றல்வாணனிடம்,
“இன்ஸ்பெக்டர், அவங்க கொடுத்த வாக்குமூலம் ஏற்கனவே உங்க போலீஸ் ஃபைல்ல இருக்கும். அதில் இல்லாத கேள்விகள் ஏதாவது இருந்தா கேளுங்க. அப்போ கூட எங்க லாயர் வந்தப்புறம் கேளுங்க!” என்றான்.
தேன்-னும் வினோத்தும் ஒருவரை ஒருவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டார்கள்.
“எதுக்காக இவ்வளவு பயப்படுறீங்க மிஸ்டர் திலீப்? நீங்க மறைக்க நினைக்குற விஷயம் ஏதாவது இருக்கா என்ன?”
கேள்வி கேட்ட தேனை எரித்து விடுவது போல ஒரு பார்வை பார்த்தான் திலீப்.
“கூல் டவுன் திலீப்!” என்ற அமிர்தா, இவர்களிடம்,
“சாரி இன்ஸ்பெக்டர்! இந்த மூணு வருஷமா எங்க ஃபேமிலி அந்த இன்சிடன்டால எவ்வளவு பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சா உங்களுக்கு திலீப்போட கோபம் புரியும். அட்லீஸ்ட் இந்த தடவையாவது போலீஸ் இன்வெஸ்டிகேஷன்ல தெளிவான உண்மை வெளி வரணும்னு நாங்களும் நினைக்கிறோம். திலீப் சொன்னதுப் போல உங்களுக்கு வேற எந்த கேள்வி இருந்தாலும் கேளுங்க!” என்றாள்.
“தேங்க்ஸ் மேடம். வி வில் லெட் யூ னோ. இப்போ நாங்க உங்க வீட்டுல வேலை செய்ற ரோசியோட பேசலாமா?”
அமிர்தா ராஜசுலோச்சனாவை பார்த்தாள்.
“ரோசி நாய்களுக்கு சாப்பாடு வைக்க போயிருக்கா, இப்போ வந்திருவா,” என்று பொதுவாக பதில் சொன்ன ராஜசுலோச்சனா,