அவள் தான் ராஜசுலோச்சனாவின் மகள் என்பது உறுதி ஆகவும், தென்றல்வாணன் இன்னும் கூர்மையாக அவளை கவனித்தான்.
அமிர்தா பார்த்த உடன் மனதில் பதியும் முகத்துடன் பளிச்சென்று இருந்தாள். பணக்கார களை இருந்தாலும் அவளிடமும் சுலோச்சனாவை போலவே எளிமையும் இருந்தது.
“ரோஹினி டெத் பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க!” என வினோதன் அமிர்தாவை கேட்டான்.
“நான் முன்பு சொன்னதையே தான் திரும்ப சொல்லுறேன் இன்ஸ்பெக்டர். ரோஹினி யுஷுவலி காலைல சீக்கிரம் எழுந்திருக்கிறவ. அதனால அன்னைக்கு காலைல அவ ரூம்ல இல்லை எனும் போது முதல்ல எனக்கு ஒன்னும் தோணலை. ஆனால் ஏழரை எட்டு மணி ஆகியும் அவளை காணும் எனும் போது, அவளை எங்கேன்னு பிரெண்ட்ஸ் நாங்க எல்லோரும் கேட்டுட்டு தேட ஆரம்பிச்சோம். திலீப் வந்த பிறகு வீட்டுக்கு வெளியேவும் தேடினாங்க. அப்புறம்...”
புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக தலையை அசைத்தான் வினோதன்.
“திலீப் எப்படி இங்கே வந்தார்?” என கேள்வி கேட்டான் தேன்.
“நான் தான் போன் செய்து வர சொன்னேன் இன்ஸ்பெக்டர். இந்த வீட்டு சம்மந்தப்பட்ட விஷயங்களில் எனக்கு எல்லா விதத்துலேயும் உதவியா இருக்கிறது திலீப் தான். அதான் அவனை போன் செய்து வர சொன்னேன்...” என்றார் ராஜசுலோச்சனா.
“திலீப் உங்க சொந்தக்காரரா?”
“ஆமாம், என் அண்ணனோட மகன்!”
“ஆனால் மேடம், வீட்டுல ஒரு பொண்ணை காணும்னா, எல்லா இடத்திலேயும் தேடுறதை