“ஹ்ம்ம்... ஓகே...”
*******************
ரோசியிடம் நன்றி சொல்லிவிட்டு, வினோதனும், தென்றல்வாணனும் நாய்களை தாண்டி வெளியே வந்த நேரம் தேன்-னின் கைப் பேசி ஓசை எழுப்பியது. எடுத்து பேசியவன், மறுபுறம் அபினவ் சொன்ன முகவரியை மொபைலிலேயே பதிவு செய்துக் கொண்டான்.
“தேங்க்ஸ் அபினவ். உனக்கு இன்னுமொரு டாஸ்க் இருக்கு. இந்த கேஸ் ஃபைல் பார்த்து இன்சிடென்ட் அன்னைக்கும் அதுக்கு முன் தினமும் ராஜசுலோச்சனா உடைய மருமகன் திலீப்புடைய போன் ரெகார்ட்ஸும், இந்த வீட்டுல இருக்குறவங்க போன் ரெக்கார்ட்ஸும் கலக்ட் செய்து வை.”
தென்றல்வாணன் போனை வைத்ததும், “இப்போ அடுத்து எங்கே தேன்? கிருஷ்ணனை பார்க்க போறோமா?” என வினவினான் வினோதன்.
“ஆமாம் வினோதன்!”
“இந்த கேஸ்ல இருக்க சாட்சிகள்நி ஸோ=ல்லிக்குற மக்களை விட நமக்கு நிறைய விபரங்கள் தந்து உதவ கூடியவர் கிருஷ்ணன் தான்!”
“யெஸ் எனக்கும் அப்படி தான் தோணுது. இத்தனை நாள் நடந்த இன்வேஸ்டிகேஷன்ல சரியான ரூட்ல போனது இவர் மட்டும் தான்னு தோணுது!”
“யெஸ் தட்ஸ் ட்ரூ. அதனால தான் அவர் இப்போ ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கார்!”
“வாட்?”
“யெஸ் வினோதன். கசப்பான உண்மை! வா போகலாம்! அந்த அந்த மிரட்டல் பொம்மை