பார்த்து பேசுறேன் சார்.”
தென்றல்வானனுக்கு எதிரே அமர்ந்து வேலை செய்துக் கொண்டே அவனின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த வினோதன் சிரித்தான்.
“ஏசி க்கு ஆப்பு வச்சுட்டீயா!!!”
“விளையாட்டு இல்லை வினோதன். நாம பத்த வச்சிருக்கோம், பெருசா வெடிக்குறதுக்கு முன்னாடி நாம இந்த விசாரணையை முழுசா முடிச்சாகனும். இல்லைனா நம்ம விசாரணையும் இதுக்கு முன்னாடி நடந்ததுப் போல அரைகுறையா நின்னுப் போகும்.”
“தெரியும் தேன். நான் எல்லா லாஜிஸ்டிக்ஸும் ரெடி செய்துட்டேன். டெரர் தமிழ் கையில சிக்குறது ஒன்னு தான் நடக்குமான்னு தெரியலை.”
“நடக்கும் வினோதன். அதுக்காக தான் கமிஷனரை இதுல கனக்ட் செய்து விட்டேன். ஒரு கிரிமினல் ரொம்ப நாளா தப்பிக்குறான்னா, லோகல் போலீஸ் துணை அவனுக்கு இருக்குன்னு அர்த்தம். கமிஷனர் கிட்ட இருந்து ஆர்டர் வந்தா தானா சிக்கிடுவான் பாரேன்!”
“அப்படி நடந்தா நல்லா தான் இருக்கும்!”
“நடக்கும்ன்னு நம்புவோம். நம்பிக்கையோட நாம நம்ம வேலையை செய்வோம்!”
*******************
அடுத்து வந்த சில நாட்கள் தேன்-னும் வினோதனும் தனித் தனியே சுறுசுறுப்பாக வேலையில் ஈடுப்பட்டார்கள்.
ரோஹினியின் உடல் அவளின் தந்தையின் சம்மதத்துடன் விடீயோ பதிவுடன் மறு-பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல அவள் வயிற்றில் இருந்து எடுக்கப் பட்ட உணவு பொருட்களும் மீண்டும் சோதனை செய்யப்பட்டன.