ரோஹினி இறந்ததாக சொல்லப்பட்ட கிணற்றில் டம்மி டெஸ்ட் செய்யப்பட்டது.
ரோஹினியின் எடை மற்றும் உயரமுள்ள பொம்மைகளை கொண்டு செய்யப்பட்ட அந்த டெஸ்ட்டுகளில், முதலில் தானாகவே கிணற்றில் விழுந்தால் பொம்மை எந்த நிலையில் நீரில் விழுகிறது என்று பார்த்தார்கள்.
பின் யாரேனும் தள்ளி விட்டால் என்ன ஆகிறது என்று கவனித்தார்கள்.
இறுதியாக யாரேனும் கைகளின் ஏந்தி தூக்கி வீசி எறிந்தால் என்ன ஆகிறது என்று குறித்துக் கொண்டார்கள்.
இயற்பியல் நிபுணரின் துணைக் கொண்டு இந்த மூன்று டம்மிகளின் நிலையையும் ரோஹினியின் உடல் நீரில் கண்டுபிடிக்கப் பட்ட நிலையையும் வைத்து ஒப்பிட்டு பார்த்தார்கள்.
இந்நிலையில் தமிழை கண்டு பிடிக்க கமிஷனர் அமைத்திருந்த தனிப்படை இன்ஸ்பெக்டர் புகழேந்தியிடம் இருந்து அவர்களுக்கு தகவல் வந்தது.
“டெரர் தமிழ் மாட்டிக் கிட்டான் தேன்!”
வினோதனும், தென்றல்வாணனும் மகிழ்ச்சியுடன் ஹை-5 கொடுத்துக் கொண்டார்கள்.
“வீ ஹாவ் ரீச்ட் தி க்ளைமாக்ஸ் வினோதன்,” என்றான் தேன்.
தொடரும்...