கொண்டாள். உதட்டில் பெரிய புன்னகையை படர விட்டாள்.
“என்ன செய்ற அக்ஷரா?”
“உன் கிட்ட இருந்து கத்துக்கிட்ட பாடத்தை பின் பற்றுறேன். நானும் பயப்படுறதை வெளில காண்பிக்காமல் இருக்க ட்ரை செய்றேன்.”
அவள் சீரியசாக சொன்ன விதத்தில் ஆதித்யாவிற்கும் சிரிப்பு வந்தது.
அதற்குள் வினாடி வினா தொடங்குவதற்கான அறிவிப்பு வந்து விடவும் இருவரும் அதில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.
ஜட்ஜ் என்று பெரிய எழுத்துக்களில் இருந்த டேக் அணிந்தவர்கள் போட்டியாளர்களிடம் வரத் தொடங்கினார்கள்.
டீம் அக்ஷயாவிடம் ஒரு பெண்மணி வந்தார்.
“ஹாய் டீம் அக்ஷயா. உங்களுக்கு குட் லக். என்னுடைய கேள்வி இது தான். ஒரு தொழில்முனைவர் என்ற விதத்தில் வெற்றி என்பதை நீங்க எப்படி வரையறுக்குறீங்க??” என ஆங்கிலத்தில் வினவினார் அந்த பெண்மணி.
அக்ஷராவிற்கு பதில் என்று எதுவும் தோன்றவில்லை.
ஆதித்யா, “பணம், புகழ், உலகமெங்கும் இருக்கும் கிளைகள் இது எல்லாம் வெற்றியை நிர்ணயிப்பதா எனக்கு தோணலை. தொழில்ன்னு ஒன்றை தொடங்கும் பொது பல விதமான தடைகள் வரும், போகும். அதை எல்லாம் தாண்டி ஒரு மனிதன் எப்படி ஜெயிக்கிறான், எப்படி தன் தொழில் நிறுவனத்தை முதல் செங்கல்ல இருந்து தொடங்கி நிலை நாட்டுகிறான் என்பது தான் முக்கியம். இதுக்கு நடுவில் வரும் பல வகையான தடங்கல்கள், தடைகள் அனைத்தையும் எத்தனை தடவை ஒருவனால் தாண்ட முடிகிறதோ அது தான் வெற்றியை வரையறுக்கும். தோல்வியை கண்டு துவண்டு போய் விடாமல் ஒவ்வொரு தோல்வியிலும் இருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டு முன்னேறி போக வேண்டும்!” என உடைந்த