(Reading time: 7 - 14 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

வருந்தி சொன்னாள் அக்ஷரா.

  

அதித்யாவுக்கு எப்போதுமே அவனின் பேச்சினால் தாழ்வு மனப்பான்மை இருந்தது. இப்போதும் அது மனதை உறுத்த தான் செய்தது.

  

அதற்காக அக்ஷராவின் பேச்சை அவனால் குறை சொல்ல முடியவில்லை.

  

“என்ன சொல்ற அக்ஷரா?  இந்த ஜட்ஜ் ஓகே, நம்மளை நேரா பார்த்து பேசினாங்க. பாடி லேங்குவேஜ், நான் சொன்ன விதம் எல்லாம் கூட எக்ஸ்ட்ரா வெயிட்டேஜ் கொடுத்திருக்கும். மத்த ஜட்ஜ் எல்லாம் ரெகார்டட் பதில் கேட்டாங்கன்னா அந்த அட்வான்டேஜஸ் இருக்காது. இப்போ நீ பேசினது நம்ம பதிலுக்கு கூடுதல் பொலிவை கொடுத்திருக்கு. நல்லா பேசின. அந்த ஜட்ஜ் சொன்னதுப் போல நம்ம டீம் சரியா அமைஞ்சு இருக்கு. நீ இல்லாம போயிருந்தா நான் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பேன்.”

  

அக்ஷ்ராவிற்கு குளிர்காலத்தில் நையகரா அருவியின் கீழே நின்றதுப் போல மனம் குளிர்ந்தது.

  

“தேங்க்ஸ் ஆதி! யாருமே என் கிட்ட இப்படி எல்லாம் சொன்னது கிடையாது. உன்னை மீட் செய்து இந்த் டீம் க்ரியேட் செய்ததுல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். ரொம்ப ஜாலியா என்ஜாய் செய்துட்டே கத்துக்குறேன்.”

  

“இட்ஸ் ஓகே அக்ஷரா. அடுத்த ஜட்ஜ் வராங்க! ரெடியா இருப்போம்.”

  

அடுத்து வந்த ஒவ்வொருவரின் கேள்விக்கும் ஆதி சட் சட்டென்று தயங்காமல் பதில் அளித்தான். அக்ஷரா அதையே நல்ல ஆங்கிலத்தில் மீண்டும் சொல்லி அவர்களின் பதிலை வலியுறுத்தினாள்.

  

முதலில் இருந்த கலக்கம் எல்லாம் போய் இரண்டுப் பேரும் ரிலாக்ஸ்டாகவே போட்டியில் பங்கெடுக்கத் தொடங்கினார்கள்.

  

நேரம் போனதே தெரியாமல் போய் கொண்டிருந்தது!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.