அனைவருக்குமான கேள்விகள் கேட்டு முடித்தப் போது இரவு வந்திருந்தது!
“ஜட்ஜஸ் ஸ்கோர் செய்ய போறாங்க. நாளைக்கும் முழுநாள் ஜட்ஜஸ் ஸ்கோர் செய்வாங்க. நாளை மறுநாள் மாலை ஐந்து மணிக்கு ரிசல்ட்ஸ் வரும். அதுவரைக்கும் நீங்க ரிலாக்ஸ் செய்து என்ஜாய் செய்ங்க.”
ஆதி அக்ஷரா இருவரும் நிம்மதி உணர்வில் இருந்தார்கள்.
“நீ என்ன நினைக்குற அக்ஷரா?” ஆதி போட்டி முடிவு என்னவாக இருக்கும் என அக்ஷ்ராவிடம் கேட்டான்.
“நாம கட்டாயம் செகன்ட் ரவுன்ட் போயிடுவோம் ஆதி. உன் பதில் ஒவ்வொன்னும் அருமையா இருந்தது. நீ ரொம்ப திறமையானவன்.”
“உன் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் கூட அருமை. இன்னொருத்தர் சொல்றதை, வேகமா அப்படி வார்த்தைகளை கோர்வையா சேர்த்து சொல்றதும் சுலபம் கிடையாது. என்ன முடிவு எடுக்குறாங்கன்னு பார்ப்போம்.”
“ஒரே நாள்ல இவ்வளவு பேரோட பதிலையும் ஸ்கோர் செய்ய முடியுமா? நூறுக்கும் மேல டீம் இருப்பாங்கன்னு நினைக்குறேன்.”
“நாம ஜக்ருதியோட காம்படிஷன்ல இருக்கோம் அக்ஷரா. அவரோட சொல்யூஷன்ஸ் எல்லாமே ரொம்ப அட்வான்ஸ்ட் ஆனது. இதெல்லாம் அவருக்கும், அவர் டீமுக்கும் ரொம்ப ஈசி. டூ டேஸ் எடுக்குறேன்னு சொன்னதே எனக்கு ஆச்சர்யம் தான்!”
“நீ அவருக்கும் இவ்வளவு பெரிய ரசிகனா இருக்க?”
அப்போது காஷ்யாப்பும் ஸ்ரீகரும் இவர்களை கடந்துச் சென்றார்கள்.
திடீரென்று நின்று திரும்பி வந்த காஷ்யாப், “என்ன ஆதி திக்கித் திணறி இங்கிலிஷை கொலை