'ஏன் மோளே, அவனுக்கு தெரிய வேண்டாமோ?"
"இல்ல வேண்டா!"
"ஏதோ அவர்கள் இருவருக்கும் என்னவோ என்று அவள் சரி என்று சொல்லிவிட்டார் .
ஒரு வாரத்திற்குப் பிறகும் வயிற்று புரட்டல் அதிகரித்ததே தவிற குறையவில்லை.
மரியம்மை கூறிய டாக்டரிடம், சென்றாள்.
டாக்டர் செக் செய்துவிட்டு அவளிடம் விவரங்களை தெரிந்துக் கொண்டு கணக்கு செய்து அறுபத்தி மூணு நாள் ஆச்சு மானசா, டியூ தேதி கொடுக்கிறேன், டயட் என்னன்னு பார்த்து பார்த்து சாப்பிடணும் மானசா! " என்று பலவித அட்வைஸ் கொடுத்தார் டாக்டர் சீதம்மா.."மாதாமாதம் செக்கப்புக்கு வரணும், ரொம்ப வீக்கா இருக்கேம்மா , நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடணும். நிறைய பச்சை காய்கறிகளும், பழங்களும் சேர்த்துக்கணும் மானசா."
"ஓகே டாக்டர்!"
'அடுத்த முறை வரும்போது உங்க பர்தாவோட வரணும்!"
'சரி டாக்டர்!"
எல்லாம் முடிந்து அவர்கள் தங்கள் தீவிற்கு வந்தார்கள் .
அவள் வீட்டிற்கு வந்தவுடன், மரியம்மை சென்று அவளுக்கு சத்தான காய்கறி பழம் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவள் ரூமிற்கு சென்றார்.
எப்படியோ ஒரு வாரம் சென்றது. அவளுக்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது. " அன்று அவள் காலேஜிலிருந்து, தன் ஸ்நேகிதி ஓமனாவுடன், வந்துக் கொண்டிருந்தாள்.