அவனென்ன பிராந்தா?”
அம்மே, நீ கூட என்ன நம்பலியா?”
“நம்பனோன்னு ஆசதான்!”
“ஐயோ! அவன் யாருன்னு தெரியாதுன்னா யாரும் நம்ப மாட்டேன்றீங்களே?” என்று வேதனை பட்டாள்.
அவள் அப்பா பதிலே சொல்லவில்லை. ஒரு வாரம் போல ஆச்சு... அவள் அப்பா ஒரு பையனை பார்த்து பெண் பார்க்க வர சொல்லாயிருந்தார். ஆனால், திடீரென்று அவன், அவள் வீட்டு முன் ஒரு ஆறு பேருடன், அந்த அக்ரஹாரத்தில் நுழைந்தான், கும்பலாக சிலர் அந்த அக்ரஹாரத்தில் போவதை பார்த்த சிலர் யார் வீட்டுக்கு போகிறார்கள் என்று பார்த்து கொண்டிருந்தவர்கள், மானசா வீட்டிற்குள் அவர்கள் நுழைவதை பார்த்து, எல்லோரும் அவர்கள் வீட்டு பக்கம் வந்தார்கள். அதுதான் அக்ரஹாரத்தில், அது சில விஷயத்தில் நல்லதாகவும் இருக்கும், சில சமயம் வினையாகவும் முடியும்.
அவன் வீட்டு பெல்லை அழுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான், கையில் வெற்றிலை பாக்கு பழம் தட்டுடன். மானசா அங்குதான் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அது ஒன்றும் பெரிய வீடு இல்லை,
அவளை பார்த்த அவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், அவளோ அதிர்ச்சியில் சிலையாய் நின்றிருந்தாள். அவன் அம்மாவும், அப்பாவும் யாரென்று பார்க்க வெளியில் எட்டி பார்த்தனர்.
" எண்ட அச்சா, ஞான் பரஞ்சேனில்ல, நிண்ட குட்டிதான் எண்ட பார்யா... இதோ இப்பவே நிங்கள் எதிர்ல பார்யாவாக்கிக்கறேன்"
அவர் சிலையாய் நின்றார்.
" எண்ட குட்டி, நிண்ட பேர் மானசா அல்லோ? இவ்விட வரு..."