கழிக்கணும்னு வந்து பொண்ணு கேக்கறான்?"
"யாரும்மா அது, எனக்கு யாரையும் தெரியாது?"
'ஒனக்கு தெரியாம எப்படிடி வந்து கேப்பான், அப்போ நீ யாரையும் பிரேமிக்கலியா?"
"இல்லம்மே, ஞான் யாரையும் பிரேமிக்கல அம்மே. "
"அப்படியா? அப்ப அவன் யாரடி வீடு தேடி வந்து ஒன்ன பொண்ணு கேக்கறான் அவன் நம்ம ஜாதிக்கூட இல்ல."
'அம்மே அது யாரா இருந்தாலும், எனக்கு தெரியாது, நான் யாரையும்
பிரேமிக்கலம்மே! "
"அப்போ போய், ஒங்கப்பாகிட்ட சொல்லுடி, பாவம் மனுஷன் ஒடிஞ்சு போயிருக்கார் பார்!"
"அச்சன் எங்கம்மே?"
"மாடியில இருக்கார் வா!"
அவர்கள் மாடிக்கு போன போது, அப்பாவின் கண்களில் கண்ணீரை பார்த்து மானஸாவிற்கு இருதயமே வெடிக்கும் போல் இருந்தது.
"அப்பா, என்னப்பா இது கண்ணீர் விட்டுண்டு?"
அவளை பார்க்காமல் வேறு புறம் திருப்பிக் கொண்டார் "ஏன்னா, இங்க பாருங்கோ நம்ம மானசா யாரையும் பிரேமிக்கலியாம், அவளுக்கு யார் வந்ததுன்னு கூட தெரியாதாம், இங்க பாருங்கோ."
"பொய்! பொய்! அவ பொய் சொல்றாடி... பொய் சொல்றா! எவண்டி இவளுக்கு தெரியாம