ஆத்துக்கு வந்து தைரியமா உங்க பொண்ண நான் விவாஹம் கழிக்க போறேன்னு சொல்லுவான், என்ன பொண்ணு கேக்கலடி, அவன் கல்யாணம் பண்ணப்போறேன்னு எனக்கு விவரம் சொல்றாண்டி.."
"ஐயோ! அப்பா, எனக்கு யாரையும் தெரியாதுப்பா, நான் யாரையும் பிரேமிக்கல, உங்களுக்கு எப்படி ப்ரூவ் பண்ணுவேன் தெரியலையேப்பா?"
"நீ ஒன்னும் நீலி கண்ணீர் வடிக்கவேணாம் கேட்டியா? வந்தவன் எல்லாம் விவரமா சொல்லிட்டு போயிட்டான்."
"சரி, எவனோ வந்து சொன்னதை நம்பறேள், நான் உங்க பொண்ணு சொல்றேன் நம்ப மாட்டேளா? சரி நீங்க ஒரு மாப்பிள்ளை பாருங்கோ நான் யார் என்னன்னு கேக்காம கல்யாணம் பண்ணிக்கறேன் போதுமா? நா யாரையும் காதலிக்கலேன்னு சொன்னா என்ன நம்ம மாட்டேளா?" என்று எப்படி இவர்களுக்கு நிரூபிப்பது என்று புரியாமல் திணறினாள்..
“ நான் மாப்பிள்ளை பார்த்ததும், என் மூஞ்சியிலே கரியை பூசிட்டு அவனோட போக மாட்டேன்னு என்ன நிச்சயம்?.... அவன்தான், ஸ்ட்ராங்கா சொல்லிட்டு போயிருக்கானே..”
“அவன்..அவன்னு சொல்றேள். ஆனா, அந்த அவன் யார்னு நேக்கு தெரியலேப்பா?”
“நோக்கு ஒன்னும் தெரியாதுடி, தெரியாது, இப்போ இங்கிருந்து தூறே போ!”
“ஏன் அம்மே, அப்பா புரிஞ்சக்கவே மாட்டேன்றார்?”
“ஏன்னா, அவர் மனசு ரன வேதனை படறது நோக்கு என்னடி அறியும், ஒரு வளர்ந்த பொண்குட்டிய வீட்ல வச்சிருக்கிற பெத்தவாளோட நிலமையை பத்தி நோக்கு என்னடி தெரியும்? வீட்டு வாசல்ல ஆஜானுபாகுவா ஒருத்தன் வந்து நின்னு, ஒன் வீட்டு பொண்ண நான் விவாஹம் கழிக்க போறேன்றான்…. நாம இருக்கறது ஒரு அக்ரகாரம் அது ஞாபகம் இருக்கோ? இங்க நாமல்லாம் ஒரு கட்டுப்பாட்டோடு இருக்கோமில்ல? அவன் எந்த தைரியத்தில இங்க வந்தான்? ஒனக்கும் தெரியாத, எங்களுக்கும் தெரியாத ஒருத்தன் என்னத்துக்கு வீடு தேடி வந்து ஒன் பொண்ண விவாஹம் கழிக்க போறேன்னு சொல்லுவான்?