அவள், "நீங்களா? நீங்க இங்க எங்க வந்தீங்க?"
தன் நினைவுக்கு வந்த அவள் தந்தை, "பார்த்தியாடி உன் பொண்ணை, ஏதோ யாரு என்னன்னு தெரியாதுன்னாளே, இப்ப பார் நீங்களான்னு கேக்கறா? "
"ஐயோ, அப்பா, நான் இவரை ஒரு முறைதான் பார்த்திருக்கேன், யாருன்னு தெரியாது, நானும், என் பிரெண்டும்........"
"நிறுத்துடி ஒன் டிராமாவை... போறும் எங்களை ஏமாத்தினது போறும், நிண்ட அச்சன் ஏமாறவன்னு முடிவு பண்ணிட்டேயில்ல, இனி உனக்கும் எங்களுக்கு ஒரு உறவும் இல்லை. "
"அச்சா வெயிட், " என்று தட்டிலிருந்து தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான், அவளுடைய சம்மதத்தை கேட்காமலேயே.. அவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகளே வரவில்லை.
"அப்பா என்னை நம்புங்கோ, எனக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது, என்னை நம்புங்கோ....." அவள் வீட்டு வாசலில் நின்றிருந்த அக்ரஹார கூட்டம் அவன் தாலிகட்டியதை பார்த்துக் கொண்டிருந்தது, கூட வந்திருந்த ஆட்கள் வீடியோ எடுத்தார்கள். அவன் தாலியை கட்டியவுடன் அவளுடைய அப்பா, "இனிமே, உனக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது, என்னடி கேட்டியா, இனி உன் பொண்ணை பார்க்க கூடாது பேசக் கூடாது மனசில ஆச்சா?" என்று பெண்ணிடமும், மனைவியிடமும் கூறினார் அவளின் அப்பா.
"அக்கா! " என்று வந்த தம்பியின் கையை பிடித்து இழுத்தார் அவளின் தந்தை, "இனி அவள் உனக்கு அக்காவும் இல்லை, எங்களுக்கு மகளும் இல்லை, புரிஞ்சுதா?" என்று விவரமே தெரியாத அந்த பையனிடம் கூறிக் கொண்டிருந்தார். அவளுக்கும் அவள் தம்பிக்கும் பதினோரு வயது வித்யாசம், அவன் தம்பிக்கு பத்து வயதே ஆகி இருந்தது, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவளின் கையை பிடித்துக் கொண்டு, அவன், அவளை அழைத்துக் கொண்டு போனான், அவன்