எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் மாதவனை எந்த பெண்ணும் அசைக்க முடியவில்லை. ஆனால் மானசாவை பார்த்தவுடன் அவனால் ஒரு நிமிடம் கூட அவளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அவன் தன் வேலையாய் சென்ற போது, மறுபடியும் அவளை பார்க்க நேர்ந்தது. அப்போது முற்றிலுமாக அவளிடத்தில் தன்னை பறிகொடுத்தான் மாதவன்.
மானஸாவோ அக்ராஹாரத்தில், ஒரு கட்டுப்பாட்டு குடும்பத்தில் கட்டுப்பாட்டோடு வாழ்ந்துக்கொண்டிருந்தவள் .
திடீரென்று ஒரு நாள், மாதவன் அவளை வழி மறித்து "உன்ன, எனக்கு பிடிச்சிருக்கு, எனக்கு உன்னை விவாஹம் கழிக்க (கல்யாணம் பண்ணிக்க) இஷ்டம், நீ என்ன சொல்ற?" என்று கேட்டான்.
அவளின் உடம்பு முழுவதும் வியர்த்து வழிந்தது... அவளின் தோழி ஓமணாவை தள்ளி போக செய்திருந்தான் மாதவன்.
"நீங்கள் எதுவா இருந்தாலும் எண்ட அச்சனிடம் பேசணும்' என்று அவள் விக்கி விக்கி கூறுகையில், அவளுடைய பயத்தை புரிந்துக் கொண்டான்.
"சரி, ஒனக்கு என்ன பிடிச்சிருக்கா?"
"இல்லை" என்று தலை அசைத்தாள்
மாதவன் அடர்த்தியான மீசையும், ஆறு அடிக்கும் மேல் உயரமும், அடர்த்தியான சுருட்டை முடி, நல்ல நிறம், எடுப்பான நாசி, ஒரு ஹீரோவை போல இருந்தான்.
ஆனால் ஏதோ ஒன்று அவளை பயப்பட வைத்தது. அவனோ, கல்யாணம் முடிந்ததும் அவள் மனதை மாற்ற முடியும் என்று நம்பினான்.