விவேக்கினுள் என்ன என்னமோ ரசாயன மாற்றங்கள் வந்தது.
சில நாட்களுக்கு முன் வந்த கனவு வேறு மீண்டும் இப்போது நினைவுக்கு வந்து அவனை வாட்டியது.
“நீங்க அழகா இருக்கீங்க சான்வி!” யோசிக்காமல் பட்டென்று சொன்னான்.
ஆனால், சான்வியின் புன்னகை உடனடியாக உறைந்துப் போனது. அவளின் விழிகளில் எச்சரிக்கை தெரிந்தது.
“எனக்காக கேட்டு சொன்னதுக்கு தேங்க்ஸ் சார். நான் வேலைக்கு கிளம்பனும். அப்புறமா ஆதி கிட்டேயே பேசுறேன்.” சான்வியின் பேச்சில் எந்த தடுமாற்றமும் இல்லை. இருந்தாலும் முன்பு போல ஈசியாக பேசாது அவள் கணக்கிட்டு பேசுவதை விவேக்கால் உணர முடிந்தது.
வாயை மூடிக் கொண்டிருக்காமல் அவசரப் பட்டு உளறிக் கொட்டியதற்கு தன்னை தானே திட்டிக் கொண்டான்.
சான்வி அழைப்பை துண்டித்தப் பிறகும், அந்த மொபைலையே கொஞ்சம் நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
கடைசியாக குழிப்பணியாரம் மனதை இழுக்க திரும்பியவன் அதிர்ந்து அட்டென்ஷனில் நின்றான்.
அங்கே அவனுக்கு நேர் எதிரே ஹரிணி கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு முன்பே ஹரிணி அங்கே வந்திருந்தால் கட்டாயம் அவன் பேசியது அவளுக்கும் கேட்டிருக்கும்.
தொடரும்...