அப்போ உண்மையாவே நீ என்ன காதலிக்கலையா?" என்று வருத்தமான முகத்துடன் கேட்டான்.
அதை பார்த்த அவளுக்கு மனது வருத்தமானது "உண்மைய சொல்லனுமா பொய் சொல்லனுமா ?" என்று தலையை சாய்த்து நமட்டு சிரிப்போடு கேட்டாள் .
"அடி... இது என்ன விளையாட்டு? ஒனக்கு எது சொன்னா நான் சந்தோஷப படுவேனோ அதை சொல்லு"
"அப்போ நான் உங்கள காதலிக்கல நாயர்."
அவன் நமுட்டு சிரிப்புடன், "இப்பத்தான் எனக்கு ஒண்ண ரொம்ப பிடிச்சிருக்கு.. ஏன் தெரியுமா, நீ உண்மைய பேசற பார் அதான் எனக்கு ஒண்ண ரொம்ப பிடிச்சிருக்கு!"
அப்போ உண்மையாவே நீ என்ன காதலிக்கலையா?" என்று வருத்தமான முகத்துடன் கேட்டான்.
"உண்மையா சொல்லனும்னா நான் இதுவரையில் உங்கள காதலிக்கல.."
"ப்ச்ச... நான் என்ன, என்னை காதலிக்கற மாதிரியா நடந்தேன், ஒரு மிருகம் மாதிரின்னா உன்கிட்ட நடந்தேன். உன்ன நான் எப்படியெல்லாம் வச்சுக்கணும்னு நினைச்சிருந்தேன் தெரியுமா மானசா? ஒரு தேவதையை போல என்னோட ராணியா என் உள்ளங் கையில வச்சு தாங்கணும்னு நினைச்சேன்... இந்த கோட்டையை உன்ன நினச்சு தான் கட்டினேன் என் காதல் மனைவிக்கு இந்த தீவையே பரிசா தரணும் அப்படியெல்லாம் நினைச்சுத்தான் விவாஹம் செய்துண்டு வந்தேன், நீயும் என்னை காதலிக்கறே ஆனா வெளியே சொல்ல பயப்படறேன்னு நினைச்சேன், அதான் உன்னை மிரட்டி உங்க அப்பாகிட்ட அப்படி பேசி உன்னை கூட்டிட்டு வந்தேன்."
"இதெல்லாம் கடந்து போன விஷயம் நாயர், மறந்துடலாம்"
"இல்லடி இத பேசிடலாம், என் மனசு ஏற்கனவே ரொம்ப வருத்தத்துல இருக்கு, இன்னும் இத