"ஞான வேண்டாம்னு சொல்லவேயில்லியே, நீ போய் பார், அவர் ஏதாவது சொன்னா, நீ கரைஞ்சிட்டு வரக் கூடாது அதான் ஞான் பரஞ்சது" என்று கூறிவிட்டு தன் பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு சிறிது வருத்தம், அவள் தன் பெற்றோரை பார்க்க வேண்டுமென்று கூறியது.
அவளை அணைத்துக் கொண்டு “என்னடா, எப்ப போகனும் உனக்கு?” என்று அன்புடன் கேட்டான் மாதவன்.
அவள், அவன் கேள்வியில் நெகிழ்ந்து அவன் மீது காதலுடன் சாய்ந்தாள்,” நாளைக்கு?”
“உன் இஷ்டம்”
அவள் தன் மீது சாய்ந்து தன் காதலை வெளிப்படுத்தியதில், அவன் கிறங்கி போயிருந்தான். “ சரி நாளைக்கு போய் பார்த்துட்டு வா!”
“நாயர் வரலையா?”
ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு , “ இல்லை மான்சி, நான் வரல”
“சரி, பரவாயில்லை, ஞான் போயிட்டு வரேன்!”
“ம் ம்…..”
இருவரும் ஒன்றும் பேசவில்லை. சாப்பிட்டு விட்டு அவர்கள் அறைக்கு சென்றார்கள். இருவரும் தங்கள் குழந்தைகளை பற்றியும் , தான் தீவில் செய்யவிருக்கும் மாற்றங்களை பற்றியும் விரிவாக கூறினான்.
தொடரும்