தொடர்கதை - சிரிக்கும் ரங்கோலி - 16 - யாஷ்
“ஆதி நம்ம டீம் செகன்ட் ரவுன்ட்க்கு செலக்ட் ஆகி இருக்கு!” அக்ஷரா மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தவளாக ஆதித்யாவை கட்டிப் பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
“எஸ், எஸ்!” என்ற ஆதிக்கும் சந்தோஷம் கரைப் புரண்டது.
இரண்டும் பேரும் மீண்டும் பலத் தடவை முதல் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப் பட்டிருந்த பேப்பரை ஆசைத் தீர பார்த்து ரசித்தார்கள்.
“அக்ஷரா, நாம அடுத்த ரவுன்ட்க்கு ரெடி செய்யனும். ப்ரோபோசல் ஆல்ரெடி சப்மிட் செய்தாச்சு. இன்னும் சேஞ்சஸ் செய்யலாம். முதல் ரவுன்ட் ஜெயிச்சதுக்கு சந்தோஷப் பட்டு டைம் வேஸ்ட் செய்தா அடுத்த ரவுன்ட் விட்டுடுவோம்.”
“ஒரு மணி நேரம் செலிபரேட் செய்யலாம் ஆதி, தப்பு கிடையாது. யூ னோ, என்னை இன்சல்ட் செய்த பசங்க ஒருத்தரும் நெக்ஸ்ட் ரவுன்ட் போகலை. என்ன மாதிரி பேச்சு பேசினாங்க!” அக்ஷரா சந்தோஷமாக சிரித்தாள்.
ஆதி அதை எதிரொலிக்காது அமைதியாக இருந்தான்.
அவனை பார்த்து அக்ஷ்ராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
“நீ எப்படி இவ்வளவு நல்லவனா இருக்க? உன்னோட எனிமியும் கூட செகன்ட் ரவுண்ட்ல இல்லை. நீ அதைப் பத்தி எதுவும் சொல்லலை?”
“என் எனிமியா? யாரை சொல்ற?”
“காஷ்யாப் & ஸ்ரீகர் டீம்!”
“அவங்க என் எதிரி கிடையாது. அவங்க நெக்ஸ்ட் ரவுன்ட் வரலையா??? என்னால நம்பவே முடியலையே? ஸ்ரீகர் மாதிரி திறமையான ஒருத்தரை பார்க்கவே முடியாது. காஷ்யாப் பொதுவா நல்லவன், அவனும் திறமையானவன்.”