(Reading time: 16 - 31 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

பதிலாக புன்னகைத்து விட்டு, தலை அசைத்து கிளம்பினாள் பாரதி.

  

"ஒரு நிமிஷம்..."

  

விவேக்கிங் குரலில் நின்று திரும்பி விவேக்கை பார்த்தாள்.

  

"அண்ணி சொன்னது சரி தான்... நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கனும்... ரொம்ப சின்ன விஷயத்தை ஊதி பெரிசு பண்ணிட்டேன்... சாரி...."

  

அவன் பேச்சை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஒரு புன்னகையை சிந்தி விட்டு சென்றாள் பாரதி.

  

என்ன மாதிரியான பெண் இவள்.... மீண்டும் விவேக்கின் மனதில் வியப்பு மேலோங்கியது....

  

************

   

பார்த்திபன் அன்று ரொம்பவே பிசியாக இருந்தான். மறு நாள் அனுப்ப வேண்டிய ஒரு டெண்டருக்கு இன்று மாலைக்குள் வேலைகளை முடித்து அவன் தந்தையிடம் ஒரு முறை காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

   

பார்த்திபன் வேலைகளுக்குள் முழ்கி இருந்தப் போது அவனின் செயலாளர் தொலைப்பேசியில் அழைக்கவும், சற்றே அலுப்புடன் தான் எடுத்துப் பேசினான். ஆனால் விவேக் அவனை பார்க்க வந்திருப்பதாக அறிந்த உடன் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே உள்ளே அனுப்ப சொல்லி விட்டு தொலைப் பேசியை கீழே வைத்தான்.

  

விவேக்கும் பார்த்திபனும் பல வருட நண்பர்கள். பள்ளி படிப்பு மட்டும் அல்லாது கல்லூரியிலும் ஒன்றாகப் படித்தவர்கள். பார்த்திபனுக்கு விவேக் மீது எப்போதுமே பிரியம் அதிகம். இப்போது திருமணமான பின் முன்பு போல் நண்பனை சந்திக்க முடியாவிட்டாலும் அவன் மனதில் அந்த நட்பு அப்படியே பசுமையாக தான் இருந்தது. அது மட்டும் அல்லாது

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.