“அப்பா இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்களோட எங்க வீட்டிலேயே இருந்து உடம்பு சரியானவுடன் போகலாம்” என்று மானசா கூறினாள்
" என்ன குழந்தை கேக்கற பாருங்கோ அவள் உண்டாக இருக்கா இந்த நேரத்தில் அவள் மனசு வருத்தப் பட வைக்காதீங்கோ இவ்வளவு தூரம் மாப்பிள்ளையும் உங்களுக்கு செய்து இருக்கார் இனிமேலும் அவளை மனசு வருத்தப்பட வைக்காதீங்கோ, "
அவரும் கண்ணில் கண்ணீருடன் மாதவனின் கையைப் பிடித்து “மன்னிச்சுக்கோங்க மாப்பிள்ளை” என்றார்.
கண்ணை இறுக மூடித் திறந்தார்.
“என்ன அச்சா என்கிட்ட போய் மன்னிப்பு கேட்டு கொண்டு,இதெல்லாம் பெரிய வார்த்தை நான் உங்கள் மகன் இப்படி எல்லாம் பேசக்கூடாது. உங்களுக்கு இப்போது நிறைய ரெஸ்ட் தேவை மனசுல எந்த கஷ்டமும் வெச்சுக்க கூடாது. ப்ளீஸ் அச்சா எங்க வீட்டுக்கு வாங்க , நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு உடம்பு சரியான பிறகு இங்கு வரலாம்.
"சரி!" என்று தலையாட்டினார்
"மன்னிச்சுக்கோ மானசா. நீ நம்ம ஆத்துக்கு வந்த போது உன்னை மதிக்கவே இல்லை, வெளியே அனுப்பி விட்டேன் என்னை மன்னிப்பாயா நீ?"
"என்னச்சன் இது என் கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்கறீங்க நீங்க யாரு என் அச்சன் தானே, என்ன பெத்தவருக்கு இல்லாத உரிமையா என்ன, சாரம் இல்லச்சன் எல்லாம் மறந்துடுங்கோ." என்று அவர் கையைப் பிடித்து மெதுவாக தடவிக் கொடுத்து அவரை சரி படுத்தினாள், மானசா. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
சிறிது நேரம், கார்த்திக்கும் மானசாவும் சின்ன வயது பற்றி பேசினார்கள். மாதவன் தன் மனைவியையே பார்த்துக் கொண்டே வந்தான்.