(Reading time: 12 - 23 minutes)
Manasa Theevu
Manasa Theevu

  

எல்லோரும் படகிற்கு வந்தார்கள்.  மெதுவாக மானசாவின் அப்பாவை இருபுறமும் கைபிடித்து படகிற்கு கூட்டி வந்தனர் அந்தப் படகை பார்த்தபோதே மானசாவின் அப்பா கிருஷ்ணன் மலைத்துப் போய் இருந்தார். அவ்வளவு அழகான படகு இந்தப் படகு என்று ஏதோ கேட்க ஆரம்பித்தார். அம்மா குதூகலத்துடன் “மாப்பிள இது எல்லாம் உங்க பொண்ணு பேர்ல தான் வாங்கியிருக்கிறார் எல்லாமே நம்ம மானசாவினுடையதுதான்”,  என்று பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

  

அதைக்கேட்ட அவள் அப்பாவிற்கு முகத்தில் பெருமை. பெருமையோடு ஒரு புன் சிரிப்பை உதிர்த்தார்..

  

அப்போது, அவருக்கு தன் மகன் கார்த்திக் அவரிடம் மானசவைப் பற்றியும் அவள் கணவனைப் பற்றியும் கூறியது ஞாபகம் வந்தது. அத்திம்பேர் அக்காவை எவ்வளவு நல்ல வச்சிருக்கர்  எவ்வளவு அருமையா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று அவரிடம் எடுத்துக் கூறியது அக்கா குழந்தைகளைப் பற்றி கூறியதும், எல்லாம் ஞாபகம் வந்தது ஆனால் என்ன இருந்தாலும் நம்பவா இல்லையே என்று மனசு வருத்தப்பட்டது.

  

 தீவில் இறங்கியதும் அந்தத் தீவின் பெயரை ஏற்கனவே கேட்டிருக்கிறார் தன் அலுவலகத்தில் எல்லோரும் பேசிக் கொண்டிருப்பார்கள் அந்தத் தீவிற்கு அதுவும் தன் பெண்ணுடையது என்று அவரால் நம்பவே முடியவில்லை தன் மருமகனை பெருமையோடு ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார். அழகும், கம்பீரமும் ஜாதி என்ன ஜாதி இப்படி ஒரு மருமகன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் என்று பெருமையோடு நினைத்துக்கொண்டார்.

  

அவர்கள் வீட்டுப் பின்புறம் படகிலிருந்து இறங்கினார்கள் அந்த வீடு பிரம்மாண்டமான மாளிகையாக இருந்தது அதிசயித்துப் போனார் மானசாவின் அப்பா.

  

தன் அப்பாவை, வீட்டினுள் கூட்டிக் கொண்டு சென்றாள் மானசா.

  

"மானாசா, குழந்தைகளைப் பார்க்க முடியுமா?"என்று மெதுவாக கேட்டார் தந்தை.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.