மானஸா, நாங்க வீட்டுக்கு போறோம் ரொம்ப நாள் ஆயிடுத்து,கார்த்திக் காலேஜ்க்கு போகணும்" என்று கூறினார்.
"கார்த்திக் காலேஜுக்கு போகட்டுமா, நீயும் அப்பாவும் இங்கே இருங்கோ கொஞ்சம் சரி ஆனதுக்கப்புறம் போகலாமே" என்று கூறினார் மானசா.
இல்லடி மானசா ரொம்ப நாள் வீட்டை விட்டுவிட்டு இருக்க முடியாது, அப்பா அங்க போனா தான் சரியா படும் அப்பா சந்தியாவந்தனம் ,செய்யணும் பூஜை செய்யணும் உனக்கு தெரியும் இல்லையா ?"
சரிமா அப்பாவை அப்பப்போ செக்கப் கூட்டிட்டு போகணும் நான் இங்க இருந்து கார் அனுப்புறேன், நீ கூட்டிட்டு போயி பார்த்துட்டு வந்துடுங்க ரெண்டு பேரும்.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நாங்களே கார் எடுத்துட்டு போறோம், நீ அதை பத்தி கவலை படாதே."
அப்போது மாதவன் அங்கே வந்தான், ” என்ன அவசரம் இங்கே இருந்துட்டு ஒரு ரெண்டு தெவசம் இருந்து பார்த்து விட்டு போகலாமே?”
"ஏய்..அது சாத்தியப்படாது, நாங்கள் உடனே போயாகணும் அச்சனுக்க்கு பூஜை எல்லாம் செய்யணும் அதனால் இங்கே முடியாது அதெல்லாம்" என்று கூறினார், மானஸாவின் அம்மா.
"சரி அம்மே, அப்போ மாதமாதம் செக்கப் போது நான் வந்து கூட்டிட்டு போறேன் உங்களையும், அச்சனையும்" என்று கூறினான்.
"மானஸாவை எங்க வீட்டுக்கு கொஞ்சநாள் அனுப்பி வையுங்கோ மாப்பிள்ளை" என்று கூறினார் மானசாவின் அம்மா
"நீங்களே இங்க கொஞ்ச நாள் இருந்து மானசாவோடும், குழந்தைகளோடும் மகிழ்ந்து விட்டு போகலாம் இல்லையா? இந்த ஐந்து குழந்தைகளை எப்படி கூட்டிக் கொண்டு வர முடியும்?"